அதிரை நியூஸ்: ஜூலை 17
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு கபோன் (Gabon). இங்கு தென் ஒம்பாயி (Gabon's southern Omboue region) எனும் பகுதியில் அபாண்டா குகைகள் உள்ளன. இந்த அபாண்டா குகைகளில் (Abanda Caves) சமீபத்தில் ஆராய்ச்சியாளார்கள் சென்ற போது ரத்தச் சிவப்பு கண்களுடன் ஆரஞ்சு நிறத்தில் முதலைகள் இருப்பதை பார்த்து அசந்து அதிர்ந்தனர்.
இந்த முதலைகள் வனாந்தரத்தில் உள்ள அபாண்டா குகைகளில் தேங்கியுள்ள சேற்றிலும் நீரிலும் வாழ்கின்றன. இவை சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருக்கலாம் எனவும் கணிக்கின்றனர். மேலும் இந்த முதலைகள் இதே குகைகளில் வாழும் ஆரஞ்சு வண்ண வவ்வால்களை அதிகம் வேட்டையாடி உண்கின்றன எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த குகையை ஆராய்ந்தவர்கள் அபாண்டா குகைகளில் வாழும் சுமார் 40 முதலைகள் இயற்கையான முதலைகளின் நிறங்களோடு தோற்றமளிக்கும் நிலையில் 4 முதலைகள் மட்டுமே ஆரஞ்சு நிறத்துடனும் செந்நிற கண்களுடனும் காணப்பட்டது குறித்து பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்றாலும் இறுதி முடிவைத் தேடி அவர்களின் ஆராய்ச்சிகள் மேலும் தொடரவுள்ளது.
Sources: Gulf News & The Guardian
தமிழில்: நம்ம ஊரான்
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு கபோன் (Gabon). இங்கு தென் ஒம்பாயி (Gabon's southern Omboue region) எனும் பகுதியில் அபாண்டா குகைகள் உள்ளன. இந்த அபாண்டா குகைகளில் (Abanda Caves) சமீபத்தில் ஆராய்ச்சியாளார்கள் சென்ற போது ரத்தச் சிவப்பு கண்களுடன் ஆரஞ்சு நிறத்தில் முதலைகள் இருப்பதை பார்த்து அசந்து அதிர்ந்தனர்.
இந்த முதலைகள் வனாந்தரத்தில் உள்ள அபாண்டா குகைகளில் தேங்கியுள்ள சேற்றிலும் நீரிலும் வாழ்கின்றன. இவை சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருக்கலாம் எனவும் கணிக்கின்றனர். மேலும் இந்த முதலைகள் இதே குகைகளில் வாழும் ஆரஞ்சு வண்ண வவ்வால்களை அதிகம் வேட்டையாடி உண்கின்றன எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த குகையை ஆராய்ந்தவர்கள் அபாண்டா குகைகளில் வாழும் சுமார் 40 முதலைகள் இயற்கையான முதலைகளின் நிறங்களோடு தோற்றமளிக்கும் நிலையில் 4 முதலைகள் மட்டுமே ஆரஞ்சு நிறத்துடனும் செந்நிற கண்களுடனும் காணப்பட்டது குறித்து பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்றாலும் இறுதி முடிவைத் தேடி அவர்களின் ஆராய்ச்சிகள் மேலும் தொடரவுள்ளது.
Sources: Gulf News & The Guardian
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.