.

Pages

Friday, July 20, 2018

அதிராம்பட்டினத்தில் நாளை (ஜூலை 21) இறுதி ஆட்டம் ~ நாகூர், தூத்தூர் அணிகள் மோதல்!

அதிராம்பட்டினம், ஜூலை 20
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 15 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை, அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், காயல்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, காரைக்கால், பாண்டிச்சேரி, தூத்தூர் உள்ளிட்ட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். இதில், நாகூர், காயல்பட்டினம், சிவகங்கை, தூத்தூர் ஆகிய 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். இதன் பின்னர் நடந்த ஆட்டங்களில் தூத்தூர், நாகூர் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இன்று (ஜூலை.20) வெள்ளிக்கிழமை நடந்த அரை இறுதி 2-வது நாள் ஆட்டத்தில் நாகூர், காயல்பட்டினம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் நாகூர் அணியினர் வெற்றி பெற்றனர்.

முன்னதாக, சிறப்பு அழைப்பாளராக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இன்றைய ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

நாளை இறுதி ஆட்டம்:
நாளை சனிக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு இறுதி ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிவில், பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.35,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.25,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.