அதிரை நியூஸ்: ஜூலை 24
நோயாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்த ஏர் இந்தியாவின் வளைகுடா சேவைகளுக்கு மட்டும் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து மிகவும் தவறான நிர்வாகிகளின் கையில் சிக்கி சீரழிந்து வரும் நிர்வாகத்தின் முதன்மை எடுத்துக்காட்டாக ஏர் இந்தியா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவை ஏலம் போட்டும் எந்த தனியார் விமான நிறுவனங்ளோ, சர்வதேச விமான நிறுவனங்களோ வாங்க வராத நிலையில் இன்னும் ஏன் எங்கள் விமானத்தில் வருகிறீர்கள் என வேண்டா வெறுப்பாக பயணிகளைப் பார்த்து கேட்பதைப் போல் அதன் நிர்வாக நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
சர்வதேச விமான நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் சமீபத்திய அறிவுறுத்தலின்படி, விமானத்தில் ஸ்ட்ரெச்சரில் (தூக்குப் படுக்கை) வரும் நோயாளிகளுக்கான கட்டணத்தை சர்வதேசம் மற்றும் உள்நாட்டுத் தடங்கலில் அதிரடியாக சுமார் 4 முதல் 5 மடங்கு உயர்த்தியது ஆனால் சர்வதேச தரத்திற்கு அதன் சேவைகள் இருக்க வேண்டும் அதன் ஊழியர்களும் சர்வதேச விமான ஊழியர்களின் தரத்துடன் நடந்து கொள்ள வேண்டும், விமானச் சேவைகளின் அடிக்கடி ரத்து செய்யக்கூடாது என்பதை மட்டும் வசதியாக எப்போதோ மறந்துவிட்டனர்.
பொதுவாக துபையிலிருந்து டெல்லிக்கு ஒரு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் (Stretcher) வைத்து கொண்டு செல்வதாக இருந்தால் சுமார் 7,000 திர்ஹத்திற்கு மேல் செலுத்த வேண்டியிருந்தது, தற்போதைய புதிய அறிவிப்பின்படி சுமார் 35,000 திர்ஹத்திற்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும். அமீரகத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஸ்ட்ரெச்சரில் செல்வதற்கு சுமார் 4,600 முதல் 7,300 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது, இதையே 5 மடங்காக பெருக்கிக் கொள்ளுங்கள், உயர்த்தப்பட்ட கட்டணம் எவ்வளவு அநியாயமானது என்பது புரியும். ஸ்ட்ரெச்சரில் செல்பவன் என்ன சொகுசாக பறக்க வேண்டும் என்பதற்காக செல்கிறானா? அல்லது ஸ்ட்ரெச்சரில் விமானத்தில் செல்பவனெல்லாம் மல்லையா, லலித், நீரவ் மோடிக்களா?
அமீரகத்தின் வாழும் பல்வேறு இந்திய சமூக ஆர்வலர்களும் இக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட கட்டணம் அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டு பழைய கட்டணமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற சர்வதேச தடங்கள் மற்றும் உள்நாட்டு சேவைகளுக்கு ஏற்றப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்படவில்லை. இதற்கிடையில் கட்டண உயர்வால் சுமார் 4 ஸ்ட்ரெச்சர் பயணிகள் தங்கள் முன்பதிவை ரத்து செய்து விட்டு பிற தனியார் இந்திய விமானங்களில் சென்றுள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் துபை மற்றும் ஷார்ஜா விமான நிலையங்கள் வழியாக ஏர் இந்தியா விமானத்தில் மட்டும் சுமார் 50 பயணிகள் ஸ்ட்ரெச்சரில் சென்றுள்ளனர் என்பதும் இவர்களின் மிகப்பெரும்பான்மையோர் குறைந்த சம்பளத் தொழிலாளர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
நோயாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்த ஏர் இந்தியாவின் வளைகுடா சேவைகளுக்கு மட்டும் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து மிகவும் தவறான நிர்வாகிகளின் கையில் சிக்கி சீரழிந்து வரும் நிர்வாகத்தின் முதன்மை எடுத்துக்காட்டாக ஏர் இந்தியா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவை ஏலம் போட்டும் எந்த தனியார் விமான நிறுவனங்ளோ, சர்வதேச விமான நிறுவனங்களோ வாங்க வராத நிலையில் இன்னும் ஏன் எங்கள் விமானத்தில் வருகிறீர்கள் என வேண்டா வெறுப்பாக பயணிகளைப் பார்த்து கேட்பதைப் போல் அதன் நிர்வாக நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
சர்வதேச விமான நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் சமீபத்திய அறிவுறுத்தலின்படி, விமானத்தில் ஸ்ட்ரெச்சரில் (தூக்குப் படுக்கை) வரும் நோயாளிகளுக்கான கட்டணத்தை சர்வதேசம் மற்றும் உள்நாட்டுத் தடங்கலில் அதிரடியாக சுமார் 4 முதல் 5 மடங்கு உயர்த்தியது ஆனால் சர்வதேச தரத்திற்கு அதன் சேவைகள் இருக்க வேண்டும் அதன் ஊழியர்களும் சர்வதேச விமான ஊழியர்களின் தரத்துடன் நடந்து கொள்ள வேண்டும், விமானச் சேவைகளின் அடிக்கடி ரத்து செய்யக்கூடாது என்பதை மட்டும் வசதியாக எப்போதோ மறந்துவிட்டனர்.
பொதுவாக துபையிலிருந்து டெல்லிக்கு ஒரு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் (Stretcher) வைத்து கொண்டு செல்வதாக இருந்தால் சுமார் 7,000 திர்ஹத்திற்கு மேல் செலுத்த வேண்டியிருந்தது, தற்போதைய புதிய அறிவிப்பின்படி சுமார் 35,000 திர்ஹத்திற்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும். அமீரகத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஸ்ட்ரெச்சரில் செல்வதற்கு சுமார் 4,600 முதல் 7,300 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது, இதையே 5 மடங்காக பெருக்கிக் கொள்ளுங்கள், உயர்த்தப்பட்ட கட்டணம் எவ்வளவு அநியாயமானது என்பது புரியும். ஸ்ட்ரெச்சரில் செல்பவன் என்ன சொகுசாக பறக்க வேண்டும் என்பதற்காக செல்கிறானா? அல்லது ஸ்ட்ரெச்சரில் விமானத்தில் செல்பவனெல்லாம் மல்லையா, லலித், நீரவ் மோடிக்களா?
அமீரகத்தின் வாழும் பல்வேறு இந்திய சமூக ஆர்வலர்களும் இக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட கட்டணம் அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டு பழைய கட்டணமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற சர்வதேச தடங்கள் மற்றும் உள்நாட்டு சேவைகளுக்கு ஏற்றப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்படவில்லை. இதற்கிடையில் கட்டண உயர்வால் சுமார் 4 ஸ்ட்ரெச்சர் பயணிகள் தங்கள் முன்பதிவை ரத்து செய்து விட்டு பிற தனியார் இந்திய விமானங்களில் சென்றுள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் துபை மற்றும் ஷார்ஜா விமான நிலையங்கள் வழியாக ஏர் இந்தியா விமானத்தில் மட்டும் சுமார் 50 பயணிகள் ஸ்ட்ரெச்சரில் சென்றுள்ளனர் என்பதும் இவர்களின் மிகப்பெரும்பான்மையோர் குறைந்த சம்பளத் தொழிலாளர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.