.

Pages

Sunday, July 22, 2018

கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக மீண்டும் புதிய இணையதளம் திறப்பு! ஏன்?

அதிரை நியூஸ்: ஜூலை 22
வாய்ப்பும் வசதியுமுள்ள உலக முஸ்லீம்களின் 5வது பெரும் கடமையாக திகழ்வது ஹஜ் யாத்திரையாகும். ஹஜ் யாத்திரைக்குள் எத்தகைய அரசியலுக்கும், சுய விருப்பு வெறுப்புகளுக்கும் இடமில்லை. ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோர்களை நியாயமில்லா காரணங்களுக்காக தடுப்பதற்கும், அனுமதிக்க மறுப்பதற்கும் எந்த ஆட்சியாளர்களுக்கும் உரிமையில்லை.

கடந்த ஆண்டு சவுதி, அமீரகம், பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகள் கத்தாருடன் திடீர் என தங்களது ராஜிய உறவுகளை முற்றாக முறித்துக் கொண்டன, இதற்கான காரணங்கள் என்னவாகவும் இருந்துவிட்டு போகட்டும், யார் மீது தவறென்று ஆராய்வதும் வேலையற்ற வேலையே ஆனால் கடந்த வருட ஹஜ் யாத்திரைக்கு கத்தார் முஸ்லீம்களை அனுமதிப்பது தொடர்பாக சவுதியும், கத்தாரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டனரே ஒழிய ஹஜ் யாத்திரைக்கான பிரச்சனையை தீர்க்க முன்வரவில்லை.

நடப்பு வருட ஹஜ் யாத்திரையிலும் இருநாடுகளுக்கிடையேயான அரசியலும் அக்கப்போர்களும் தொடர்வதால் கத்தாரிலிருந்து ஹஜ் செய்யக்கூடிய முஸ்லீம்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சவுதி அரசு https://qh.haj.gov.sa என்ற ஹஜ் விண்ணப்ப இணையதளத்தை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அந்த இணையதளத்தை கத்தார் அரசு முடக்கிவிட்டதாக கூறி புதிதாக  https://qh1.haj.gov.sa  என்ற இணையதளத்தை சவுதி மீண்டும் வெளியிட்டுள்ளது. யார் சொல்வது உண்மை? கத்தாரிலிருந்து ஹஜ் செய்ய விரும்பும் முஸ்லீம்களை உண்மையில் தடுப்பது யார்?

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.