.

Pages

Tuesday, July 24, 2018

ஷார்ஜாவில் சிறைவாசிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா!

அதிரை நியூஸ்: ஜூலை 24
ஷார்ஜா சிறைவாசிகள் ஷார்ஜாவிலுள்ள இஸ்லாமிய நாகரீக அருங்காட்சியகத்தை பார்வையிட அழைத்து செல்லப்பட்டனர்

அமீரகத்தில் செயல்படும் சிறைக்கூடங்களை பொதுவாக தண்டனை மற்றும் மறுவாழ்விற்கான மையம் என்றே அழைக்கின்றனர். ஷார்ஜா மறுவாழ்வு மையங்களில் உள்ள சிறைவாசிகளிலிருந்து ஆண், பெண் என இருபாலரிலிருந்தும் நன்னடத்தை மிக்கவர்களை தேர்வு செய்து ஷார்ஜாவின் இஸ்லாமிய நாகரீகத்தை எடுத்துக்கூறும் அருங்காட்சியகத்தை காண அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் கைவிலங்குகள் இல்லாமல் சுதந்திரமாக மியூஸியத்தை சுற்றிவரவும் இஸ்லாமிய விழுமியங்களின் உயர்வை அறிந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் ஷார்ஜா போலீஸாரின் ஏற்பாட்டின் கீழ் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளும் அல்கரைன் பகுதியிலுள்ள ஜூரோ-6 எனும் மாலுக்கு வரவழைக்கப்பட்டு சந்தோஷமாக கலந்துரையாட ஒருநாள் முழுவதும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் குழந்தைகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதுடன் சிறைவாசிகள் தயார் செய்த பல்வேறு கைவினைப் பொருட்களை கொண்டு கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் சிறைவாசிகள் தண்டனை முடிந்து வெளியேறிய பின் குற்றமற்ற வாழ்க்கைக்கு, அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.