.

Pages

Wednesday, July 18, 2018

மீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் 4G சேவை மீண்டும் கிடைத்தது !

'மீடியா மேஜிக்' எஸ். நிஜாமுதீன்
அதிராம்பட்டினம், ஜூலை 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ். நிஜாமுதீன் (43)  இவர், 'மீடியா மேஜிக்' என்கிற பொதுமக்கள் சேவை மையத்தை அதிரை பேருந்து நிலையம் அருகே ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சொந்தமாக நடத்தி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஏர்டெல் நெட்வொர்க் சேவையின் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்.

கடந்த ஓர் ஆண்டாக 4G சேவைக்கான கட்டணம் செலுத்தியும், சரிவர சிக்னல் இயங்காததால், அதன் சேவையை முழுமையாக பெற முடியவில்லை எனக்கூறி ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கததால் அதிருப்தி அடைந்தவர், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையமான டிராய்க்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பி இருந்தார். இதையடுத்து, இவரது புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிராய் அறிவுறுத்தியதின் பேரில், உடனடியாக ஏர்டெல் நெட்வொர்க் நிறுவன பிரதிநிதிகள், புகார்தாரர் மீடியா மேஜிக் நிறுவனர் நிஜாமுதீனை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள டவரின் பழுதை சரிசெய்து, சிக்கனல் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து மீடியா மேஜிக் நிறுவனர் எஸ். நிஜாமுதீன் கூறியது;
அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டாக 4G சேவைக்கான கட்டணம் செலுத்தப்பட்டும், இப்பகுதியில்,  சிக்னல் சரிவர கிடைப்பதில்லை. இதனால் 4G சேவையை நுகர்வோர் முழுமையாக பெற முடியவில்லை.

இதையடுத்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையமான டிராய், மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்புத்துறை உட்பட தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு  நான் அளித்த புகாரைத் தொடர்ந்து, நான் வசிக்கும் பகுதியில் மட்டும் சிக்னல் சரிசெய்யப்பட்டு, தற்போது 4G சேவை கிடைக்கிறது. மீதுமுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் 4G சேவை கிடைப்பதற்கு ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.