.

Pages

Saturday, July 21, 2018

அதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் தூத்தூர் அணி சாம்பியன் ~ பரிசளிப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 21
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 15 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள மைதானத்தில் கடந்த ஜூலை 08 ந் தேதி தொடங்கி நடந்து வந்தது.

தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், காயல்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, காரைக்கால், பாண்டிச்சேரி, தூத்தூர் உள்ளிட்ட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில், நாகூர், காயல்பட்டினம், சிவகங்கை, தூத்தூர் ஆகிய 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர், நாகை மாவட்டம், நாகூர் அணிகள் மோதினர். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் தூத்தூர் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

ஆட்ட நடுவராக உடற்கல்வி ஆசிரியர் வாசுதேவனும், லைன் நடுவர்களாக அதிரை ஷபானுதீன், அசாருதீன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.

இதன் பின்னர், மைதானத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தொடர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தூத்தூர் அணிக்கு ரூ.35,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெற்ற நாகூர் அணிக்கு  ரூ.25,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட்டன.

முன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் அபூபக்கர், தஞ்சை மாவட்ட கால்பந்தாட்ட கழகத் தலைவர் சிவானந்தம், செயலாளர் வேலுச்சாமி, திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் ஏ.முகமது அலி, அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன், காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகனந்தம், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கச் செயலாளர் எம்.எப் முகமது சலீம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர், ஆட்ட முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியினை, அதிரை கால்பந்தாட்டக் கழகத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தொகுத்து வழங்கினார். தொடர் போட்டி ஏற்பாட்டினை அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நிர்வாகிகள் முகமது தமீம், சேக் தம்பி, அகமது அனஸ், பாருக், புஹாரி, சமியுல்லாஹ் ஆகியோர் செய்து வந்தனர். இன்றைய இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வருகை தந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.