.

Pages

Sunday, July 29, 2018

அதிரையில் இலவச பல் சிகிச்சை முகாம் ~ 255 பேர் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை 3
ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, மகிழங்கோட்டை அ.ராஜரெத்தின தேவர் நினைவாக, இலவச பல் சிகிச்சை முகாம் அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன் தொடங்கி வைத்தார். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எம்.எம் சேக் அலி,  மகிழங்கோட்டை ஆர். அண்ணாமலை, ஜி. பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஆதி.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை பல் பொதுநல மருத்துவர் மற்றும் பல் வேர் சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.பாரதி தலைமையிலான மருத்துவக் குழுவினர், 255 பேருக்கு பல், தாடை மற்றும் வாய் சம்மந்தமான பிரச்னைகளுக்கு மருத்துவ பரிசோதனையும், ஆலோசனைகளும், சிகிச்சையும் அளித்தனர். இதில், 100 பேருக்கு அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இம்முகாமில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்றன. இம்முகாமில், சிறப்பு அழைப்பின் பேரில் பிசியோதெரபிஸ்ட் டி. செல்வசிதம்பரம், வி. சுப்ரமணியன், அண்ணாமலை, தெய்வநாதன் உட்பட ஊர் முகர்கர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 


 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.