.

Pages

Monday, July 16, 2018

இந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழிக்குப்பழியாக 300 முதலைகளை கொன்று குவித்த கும்பல்!

அதிரை நியூஸ்: ஜூலை 16
இந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழிக்குப்பழியாக 300 முதலைகளை கொன்று குவித்த கும்பல்

இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் செயல்படும் தனியாருக்குச் சொந்தமான முதலை வளர்ப்புப் பண்ணை அருகே 48 வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் தனது கால்நடைகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது முதலைப் பண்ணையிலிருந்து தப்பி வந்த ஒரு முதலை ஒன்று அம்மனிதரை தாக்கி கொன்றுள்ளது.

முதலையால் தாக்கப்பட்ட மனிதர் எழுப்பிய மரண ஓலத்தை தொடர்ந்து அங்கு வந்த அந்த மனிதரது குடும்பத்தினரும் இன்னுமொரு பெரும் கும்பலும் ஆத்திரமடைந்து அம்முதலை பண்ணையிலிருந்த சுமார் 292 முதலைகளை கத்தி, கோடாரி, மண்வெட்டி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி கொன்றொழித்து பழிக்குப்பழி வாங்கினர்!

முதலைகள் வெளியேறாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய முதலைப் பண்ணை முதலாளி இறந்த மனிதருக்கு நஷ்டஈட்டையும் தர வேண்டும் என ஊர்வலமாக புறப்பட்டு அங்கிருந்த காவல் நிலையத்தில் ஆத்திரத்துடன் புகாரும் அளித்தனர் ஆனால் காவல்துறையினர் சிசிடிவி உதவியுடன் முதலைகளை கொன்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.