.

Pages

Wednesday, July 25, 2018

அதிரையில் சிஎம்பி வாய்க்கால் சீர் செய்யும் பணி தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 25
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கு முறை வைக்காமல் ஆற்று நீர் திறந்துவிடக்கோரியும், அதிராம்பட்டினம் பகுதி ஆற்று நீர் வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளை சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்  கடந்த திங்கட்கிழமை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன், துப்புரவுப் பணியாளர்கள் கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில், சிஎம்பி வாய்க்கால் ஆற்று நீர் வழிப் பாதையில் உள்ள அடைப்புகளை சீர்செய்யும் பணிகளில் அதிரை பேரூராட்சி பணியாளர்கள் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர். பணிகளை நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பார்வையிட்டனர்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.