![]() |
இசட். முகமது இலியாஸ் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் இசட்.முகமது இலியாஸ் (வயது 31). எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகியான இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது;
கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு செல்லும் போது, அதிராம்பட்டினம் போலீசார் அவதூறாக பேசி வந்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்ததால் அவர்கள் என் மீது ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில், 01.04-2013 அன்று மோட்டார் அன்று மோட்டார் சைக்கிளில் புத்துப்பட்டினம் அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிராம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ் மோகன், கமல், ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் என்னை அவதூறாக பேசி கடுமையாக தாக்கினர். என்னிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டனர். எனவே, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக, அவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மனுதாரருக்கு வழங்கிவிட்டு அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்' என்று உத்தரவிட்டார்.
இப்படி ஒரு வீர மகன் அவசியம் அதிரைக்கு தேவை
ReplyDeleteஇப்படி ஒரு வீர மகன் அவசியம் அதிரைக்கு தேவை
ReplyDelete