![]() |
துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற வஜீர் அலி |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி (வயது 44). ரைபிள் கிளப் உறுப்பினரான இவர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார்.
தமிழ்நாடு துப்பாக்கிச்சூடு கழகத்தின் சார்பில் 44-வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரை ரைபிள் கிளப்பில் கடந்த (ஜூலை 24) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மதுரை துப்பாக்கி சுடும் கிளப் தலைவரும், மாநகர காவல் ஆணையருமான டேவிட்சன் தேவாசீர்வாதம் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கிவைத்தார். இதில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த 800 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் ரைபிள், பிஸ்டல் வகைகளில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகள் என தனிதனியே நடைபெற்றது.
இதில், அதிரை வீரர் வஜீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் சுடும் போட்டியில் கலந்துகொண்டு 314 புள்ளிகள் ( 314 / 400, 79.8% ) பெற்று முதன் முறையாக சாதனை நிகழ்த்தி உள்ளார். டெல்டா மாவட்டத்தின் கடலோரப் பகுதியான அதிராம்பட்டினத்திலிருந்து துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வரும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிரை வீரர் வஜீர் அலி கூறியது;
சிறு வயது முதல் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் விளையாடுவது எனக்கு அதிக ஆர்வம். பல்வேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறேன். போட்டிகளில் கலந்துகொள்ளும் அதிரையின் முதல் வீரர் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதனை நிகழ்த்தும் வீரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள், பரிசுகள் பெரும் வாய்ப்பு உள்ளது. இப்போட்டிகளில் விளையாட அதிக ஆர்வம் கொண்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன். இதற்கான பயிற்சி மையத்தை, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இம்மையத்தில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெரும் பல்வேறு நுணுக்கங்களை வீரர்களுக்கு கற்றுக்கொடுப்பேன். துப்பாக்கி சுடுவதில் சிறந்த வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம். அதுவும் டெல்டா மாவட்டத்தின் கடலோரப்பகுதியான நமது பகுதியிலிருந்து அதிக சாதனையாளர்கள் உருவாக வேண்டும். இவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் நமது பகுதிக்கும், நமது நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தர வேண்டுமென்பதே என நோக்கம்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.