.

Pages

Saturday, July 28, 2018

அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 28
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், காமராஜர் 116-வது பிறந்த தின விழா பேச்சுப் போட்டி, இன்று சனிக்கிழமை லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவுக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் ஹாஜி
எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து போட்டியை வழிநடத்தினார். செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'கல்விக்கண் திறந்த காமராஜர்', 'காமராஜர் காண விழைந்த இந்தியா' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8 வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டன. இதில், அதிரை காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, புதுப்பட்டினம் அபூ மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 28 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டி நடுவர்களாக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பார்த்தசாரதி, லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர். போட்டி முடிவில், கீழோர் பிரிவில், எழில் ஜீவானா, எச். முஜம்மில், விஷாலினி ஆகியோரும், மேலோர் பிரிவில், எஸ்.கவிப்பிரியா, எம். அனீஸ் பாத்திமா, பிரியதர்ஷினி ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் காமராஜரின் சாதனைகள், தொண்டு குறித்துப் பேசினார். விழாவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் எம். அகமது, எம். சாகுல் ஹமீது, எஸ்.ஏ அப்துல் ஹமீது, என்.ஆறுமுகச்சாமி, சி.சார்லஸ், எம்.நிஜாமுதீன், ஏ.கண்ணன் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.