.

Pages

Wednesday, July 18, 2018

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் 422 பேருக்கு கண் பரிசோதனை ~ IOL சிகிச்சைக்கு 96 பேர் பரிந்துரை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

முகாமிற்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்கச் செயலர் எம். அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் கே.ஸ்ரீராம் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 422 பேருக்கு சோதனை செய்ததில் 96 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மலிவு விலையில் 72 பேருக்கு மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது. முகாம் காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடந்தது.

அதிரை கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) தன்னார்வல அமைப்பினர் முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.

முகாமில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் கே. முருகானந்தம், ஆர்.செல்வராஜ், பி.பிச்சை முத்து, என்.ஆறுமுகச்சாமி, எம்.நிஜாமுதீன், எம்.அபுல் ஹசன் சாதலி, எம்.நெய்னா முகமது, மாணிக்க. முத்துசாமி, டி. துரைக்கண்ணு, ஏ.கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.