.

Pages

Tuesday, July 24, 2018

தஞ்சையில் ஜூலை 28-ல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு!

கோப்பு படம்
தஞ்சாவூரில் ஜூலை 28-ம் தேதி ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் ஆயுதப் படை மைதானத்தில் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கான தேர்வு ஜூலை 28-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டையைக் கொண்டு வர வேண்டும். மேலும், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையைச் சுற்றி 8 கி.மீ. தொலைவில் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

வயது 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். உயரம் 170 செ.மீ.-ம், மார்பளவு 81 செ.மீ. முதல் 86 செ.மீ. வரையும் இருத்தல் வேண்டும்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.