.

Pages

Monday, July 30, 2018

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் மார்ச் 2019 ல் நிறைவு ~ ரயில்வே உயர் அதிகாரி தகவல்!

பட்டுக்கோட்டை, ஜூலை 30
பட்டுக்கோட்டை~ திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் 2019 மார்ச் மாதம் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் என்.ஜெயராமன் சென்னையிலுள்ள தெற்கு ரயில்வே மக்கள் குறைத் தீர்க்கும் தனிப்பிரிவு பொதுமேலாளர் அலுவலகத்தில், துணை இயக்குநர் வி. சிவசாமியை ஜூலை 18 ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில், காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான 147 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணியில், தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை வரையிலான 73 கி.மீ. தொலைவுக்கு அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இவ்வழித்தடத்தில் முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, தில்லைவிளாகம், பாண்டி, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் உள்பட மேலும் சில ஊர்களில் ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அப்போதுதான் காரைக்குடி~ சென்னைக்கு நேரடி ரயில் சேவை தொடங்க முடியும் என கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு சென்னை தெற்கு ரயில்வே துறையின் துணை முதன்மைப் பொறியாளர் வி.சீனிவாசன் அளித்துள்ள பதில்:
பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி ~ திருவாரூர் வழித்தடத்தில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதைப் பணிகள் அனைத்தும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய வாய்ப்புள்ளது.

மன்னார்குடி ~ பட்டுக்கோட்டை புதிய வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள அகல ரயில் பாதை பணியில், குறிப்பிட்ட சில பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

முழுமையான பணிகளுக்கான திட்ட மதிப்பீடு ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது. இதேபோல, தஞ்சாவூர்~ பட்டுக்கோட்டை புதிய வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள அகல ரயில் பாதை பணிக்கு முழுமையான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.