.

Pages

Saturday, April 4, 2020

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஏப்.04
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களினால் மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் 8 எல்லைகளும் மூடப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தவிர்க்கமுடியாத காரணங்களினால், மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியிருந்தால், thanjavur.nic.in என்ற இணையதளத்தில்  உரிய ஆவணங்களுடன் மின்னஞ்சல் முகவரியை சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, ஆவணங்கள் மற்றும் விண்ணப்பக் காரணம் சரியாக இருக்கும்பட்சத்தில், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுமதி சான்று அனுப்பப்படும்.

மேலும், அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான அனுமதி அனைத்தும் இணையதளம் மூலமாகவே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் நேரடியாக வருவதை தவிர்த்து ஆன்லைன் முறையினை பின்பற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.