அதிராம்பட்டினம், ஏப்.03
கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது என பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி LKG முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பித்தல் தொடங்கி உள்ளது. இதில், மும்பையிலிருந்து LEAD SCHOOL கல்வி நிறுவன பயிற்றுநர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஓய்வில் இருக்கும் மாணவர்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், விடுமுறைக்கு பின், பள்ளி தொடங்கியதும் அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே ஆன்லைன் மூலம் பாடம் கற்பிப்பதை தொடங்கி இருக்கும் முதல் கல்வி நிறுவனம் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது என பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி LKG முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பித்தல் தொடங்கி உள்ளது. இதில், மும்பையிலிருந்து LEAD SCHOOL கல்வி நிறுவன பயிற்றுநர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஓய்வில் இருக்கும் மாணவர்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், விடுமுறைக்கு பின், பள்ளி தொடங்கியதும் அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே ஆன்லைன் மூலம் பாடம் கற்பிப்பதை தொடங்கி இருக்கும் முதல் கல்வி நிறுவனம் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.