.

Pages

Friday, April 3, 2020

சமூக வலைதளங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி PFI அமைப்பின் மாவட்டத்தலைவர் புகார்!

அதிராம்பட்டினம், ஏப்.03
சமூக வலைதளங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் திருவாரூர் மாவட்ட காவல் துறை சைபர் கிரைம் (Cyber Crime) பிரிவில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பது;
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு எதிராகவும் சங்பரிவார இயக்கங்களால் தொடர்ந்து வன்முறை மற்றும் பொய்யான கருத்துகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றது. எனவே, இதுபோன்று வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.