வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் பொதுமக்களிடம் நிதி வசூல் திரட்டும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
நிகழ்சிக்கு பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு என் ஆர் ரெங்கராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். நிதி வசூலை பட்டுக்கோட்டை நகர் மன்ற பெருந்தலைவர் திரு ஜவஹர் பாபு தொடக்கி வைத்தார். மண்டலம் 21 ன் துணை ஆளுநர் பத்மானந்தன் முன்னிலை வகித்தார்.
இதில் மனோரா ரோட்டரி சங்க தலைவர் சம்பத், செயலாளர் வீரப்பன், ரோட்டரி சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் கலை குமார், கோட்டை ரோட்டரி சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சுந்திர மூர்த்தி, மிட் டவுன் ரோட்டரி சங்க தலைவர் பன்னீர் செல்வம், செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் ரோட்டரி சங்கங்களின் ஏனைய பொறுப்பாளர்கள், இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ரோட்ராக்ட் சங்க மாணவிகள் உண்டியல் ஏந்தி காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.