.

Pages

Friday, September 19, 2014

ஜப்பான் கல்லூரியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் பங்கேற்ற அதிரை மாணவர்கள் !

சர்வதேச மாணவர்களுக்கு ஜப்பான் அரசு கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலைகல்வி படிப்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இவற்றை பயன்படுத்தி ஜப்பான் நாட்டில் காணப்படும் கல்வி நிறுவனங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மேற்கல்வி பயின்று வருகின்றனர்.

ஜப்பான் டோசிக்கன் நகரில் உள்ள ஆஷிகாஹா கம்யூணிட்டி கல்லூரியில் இந்தியர்கள் உட்பட சீனா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் இந்தியர்களில் அதிரை மாணவர்களும் உண்டு. நமதூரைச் சேர்ந்த சம்சுல் ரஹ்மான், மொய்தீன், அசாருதீன் ஆகியோர் இன்று கல்லூரியில் நடைபெற்ற ஜப்பான் மொழியிலான பேச்சு போட்டியில் பங்கேற்று பாராட்டுகளை தட்டிசென்றனர். சக மாணவர்கள் இவர்களை ஊக்குவித்தனர்.




1 comment:

  1. இந்தப்பள்ளிக்கு நான் ஒருமுறை சென்று அங்கு நடக்கும் வகுப்புகளில் கலந்துகொண்டவன் .
    இங்கு படிக்கும் நமதூர் மாநாக்கள் சம்சுல் ரஹ்மான் ,அஜார் மற்றும் முஹயுதீன் ஆகியோர் சிறந்த சமூக ஆர்வலர்கள் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.