.

Pages

Sunday, September 28, 2014

அதிரை ஹஜ் பயணிகளை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த உறவினர்கள் !

இஸ்லாமியர்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்வார்கள்.

நடப்பாண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்டங்களில் குழுவினர்களாக சவூதி அரேபியா நகருக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கின்றனர். இதில் 100 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் இம்முறை புனித பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று இரவு புனித ஹஜ் பயணத்திற்கு சென்ற அதிரையர்களை அவர்களின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வழியனுப்பி வைத்தனர். அதே போல் ஹஜ் பயணத்திற்கு பிற ஊர்களிலிருந்து வந்த பயனாளிகளையும் அவரவர்களின் உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.





3 comments:

  1. நம்மவர்களின் ஹஜ்ஜையும் வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஏற்றுகொள்ள அனைவரும் துஆ செய்யுவோம் .........
    பேணுதல் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்களின் மரணம் வரை அவைகள் காப்பாற்ற படவேண்டும் இலையேல் இந்த நவீன உலகில் சக வசதிகளையும் பெற்ற நமக்கு இதுபோன்ற உம்ர மற்றும் ஹஜ் சம்பிரதாயங்கள் ஒரு சுற்றுலா போன்றே கருதப்படும் .

    ReplyDelete
  2. உங்களது ஹஜ் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைய எங்களது துஆவும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  3. அன்பின் அபூபக்கர் காக்கா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    தயவு செய்து கமெண்ட் என்ற பெயரில் ஹஜ் செய்யச் செல்பவர்களை கொச்சை படுத்தும் விதமாக கமெண்ட் இட வேண்டாம்.

    ஹஜ்ஜுக்கு செல்பவர்களின் மன நிலையை அல்லஹ் மட்டுமே நன்கறிந்தவன். அங்கு உள்ள நிலைகள் சூழல்கள் அனைத்தையும் கடந்து இந்த மாபெரும் வணக்கத்தை செய்து அன்று பிறந்த குழந்தையாக வரவுள்ளவர்களுக்காக துஆ செய்வதே நம் கடமை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.