.

Pages

Tuesday, September 30, 2014

அதிரையில் கன மழையால் மீன் வியாபாரம் பாதிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படும்.

அதிரை சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், ஆழ்கடலில் காணப்படும் மீன்கள் கரைக்கு வரத் துவங்கியுள்ளன. இதனால் மீனவர்கள் வலையில் அதிகமாக சிக்குகின்றன. பிடிபடும் மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகின்ற கடைத்தெரு மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. இங்கு உள்ளூர் மற்றும் அதிரை சுற்று வட்டாராப்பகுதிகளின் மீன் வியாபாரிகளே அதிகளவில் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிரையில் இன்று காலை மீண்டும் கனமழை பெய்து வருவதால் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் மீன் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. மீன்கள் தேங்கி காணப்படுகின்றன.





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.