.

Pages

Tuesday, September 23, 2014

அதிரையில் திடீர் மின்தடைகளால் பொதுமக்கள் அவதி !

அதிரையில் இன்று காலை முதல் சுமார் நான்கு முறை திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இது குறித்து 'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
இந்த திடீர் தடை குறித்து மின்சார உயர் அதிகாரியிடம் கேட்டபோது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு அலகிலும் தலா 210 மெகாவாட் மின்சாரம் என 5 அலகிலும் 1050 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக 2 வது அலகில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இதனால் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என்றும், சுழற்சி முறையில் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் நிலைமை சரியாகிவிடும் என்று கூறியதாக நம்மிடம் தெரிவித்தார்.

2 comments:

  1. மின் தடை ஏற்பட்டாலும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் அதேபோலே அடுத்த ஆண்டு பரிசாக 15% மின் கட்டணம் உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது,இதையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்!

    குடிகாரர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! .மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து இருப்பதால் அதை சமாளிக்கும் பொருட்டு ஜெயா தலைமையிலான அரசு மானியம் வழங்கும் என்று உறுதி அளித்து உள்ளது, இதற்கு நிதி ஆதாரம் வழக்கம் போல் உங்களை நம்பியே உள்ளது.... இதற்காக டாஸ்மாக்கில் விலையை சிறிது ஏற்ற கூடிய கட்டாய சூழலில் அரசு உள்ளது.

    அதை பெருந்தன்மையுடன் புரிந்து கொண்டு இந்த விலை ஏற்றத்திற்கு எப்போதும் போல் ஆதரவு தாருங்கள்....நீங்கள் வழக்கம் போல் குடிப்பதை குடித்தாலே போதும், வருமானம் வந்து விடும், உங்களின் மேல் அக்கறை கொண்டு உள்ள அரசு என்பதால் அதற்க்கு மேல் குடிப்பதை அரசே விரும்பவில்லை.

    அதை அரசு ஒரு போதும் ஊக்குவிக்காது, தமிழக மக்களின் கஷ்டங்களில் பங்கெடுக்கும் உங்களை போன்ற தியாகிகளை தமிழகம் பெற்று உள்ளது.

    குடிமகனே ........! தொழில் வளர்ச்சியில் கடைசி இடத்தில் தமிழகம் இருப்பதை மறவாதே !

    ReplyDelete
  2. தற்போதைய மின்வெட்டு இருபது சதவிகிதம் என்று தகவல்கள் தெரிந்த ‎வட்டாரங்கள் கூறுகின்றன.‎

    அப்படி என்றால் ஒருநாளைக்கு, அதாவது இந்த இருபத்திநான்கு மணி ‎நேரத்தில், நான்கு மணிநேரம் நாற்பத்தி எட்டு நிமிடங்கள் மின் வெட்டு ‎இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Consumer & Human Rights, Thanjavur District Organizer
    Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.