.

Pages

Saturday, September 27, 2014

முத்துப்பேட்டையில் கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு - கடை அடைப்பு - சாலை மறியல் ! [ படங்கள் இணைப்பு ]

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை கண்டித்து முத்துப்பேட்டையில் கடை அடைப்பு, சாலை மறியல், கொடும்பாவி எறித்து அ.தி.மு.கவினர் ரகளையில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கோர்ட்டு தண்டனை விதித்திருப்பதை கண்டித்து அ.தி.மு.க ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகி கோவி.பிரபு தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர் நாசர், பேரவை செயலாளர் அயூப்கான், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குறிஞ்சி, நகர இளைஞரணி செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி துணைத் தலைவர் அப்துல் வகாப், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் தாவூது, முன்னால் பேரூராட்சி கவுன்சிலர் கனேசன், இலக்கிய அணி செயலாளர் தங்கமணி, கூட்டுறவு வங்கி தலைவர் நாராயண சாமி, கிளை செயலாளர் செம்பை இளங்கோ, முன்னால் பேரூராட்சி தலைவர் சேக் தாவூது, நிர்வாகிகள் யானை காலிது, கல்லடிக்கொல்லை செந்தில், சிவராமன், பாலசுப்பிரமணியன், சேக்ஜி, மருது ராஜேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் ரகளையில் ஈடுப்பட்டு பழைய பேருந்து நிலையம் பகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை எறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்கள் நகரம் முழுவதும் ஊர்வலமாக சென்று ரகளையில் ஈடுப்பட்டு கடைகளை அடைக்க வருப்புறுத்தினர். இதனால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். பின்னர் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இதனால் முத்துப்பேட்டையில் மக்கள் நடமாற்றம் இன்றி பதற்றத்துடன் காணப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள் : 
'நிருபர்' மொய்தீன் பிச்சை முத்துப்பேட்டை



1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.