.

Pages

Saturday, September 27, 2014

அதிரையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை ! காட்டு குளம் நீர் மட்டம் ஒரு அடி உயர்வு !!

அதிரையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியிலிருந்து கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் நீடித்து பெய்த மழையால் அதிரை குளுமையாக காட்சியளிக்கிறது. வறண்டு காணப்பட்ட அதிரையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் K.M.A ஜமால் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
'நேற்று நள்ளிரவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அடுத்து ஒரு மணி நேரத்திற்கு மீண்டும் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. நான் வசிக்கும் இருப்பிடம் அருகே உள்ள காட்டுக்குளத்திற்கு கடந்த மாதம் ஆற்று நீர் வந்தது. இந்நிலையில் காற்றுக் குளத்தின் தண்ணீர் அளவு சுமார் 3 அடி முதல் 4 அடி வரை நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. நேற்று நள்ளிரவில் பெய்த மழையால் சுமார் 1 அடி உயர்ந்து காணப்படுகிறது. இந்த மழை நீடித்து பெய்தால் அதிரையின் அனைத்து குளங்களும் நிறைந்துவிடும்' என்றார்.



2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    காட்டுக்குளம் நான் குடி இருக்கும் வீட்டுக்கு மிக மிக அருகில் ‎இருப்பதாலும், இருபத்திநான்கு மணிநேரமும் என்னுடைய பார்வையில் ‎இருப்பதாலும், அதன் நீர் மட்டத்தை அளவுகோல் வைத்து தினம் தினம் ‎காலை நேரத்தில் அளந்து பார்ப்பது என்னுடைய பழக்கமாக ‎இருந்துவருகிறது.‎

    காட்டுக்குளத்திற்கு தண்ணீர் விட்டதிலிருந்து நேற்றைய தினப்படி மூன்று ‎அடிக்குமேல் நீர் மட்டம் இறங்கி காணப்பட்டது.‎

    கடந்த நள்ளிரவில் பெய்த மழையில் ஒரு அடி உயர்ந்து காணப்படுகிறது. ‎இந்த மழை இப்படியே நீடித்தால் கவலை இல்லை. வல்ல நாயன் நாட ‎வேண்டும். ஆமீன். ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.