ஆவணப்படத்தினை இயக்குனர் கே. பாக்கியராஜ் வெளியிட கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி கௌரவம்மாள் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் ஜவஹர் பாபு, பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா, நடிகர் ராஜேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா
கையும் காலும்தான் மிச்சம்.......
ReplyDeleteவிவசாயிகளின் அவல நிலையை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நாடோடிமன்னன் படத்தில் அன்று சொன்னது இன்றும் மாறவில்லை.
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி பண்ண வேண்டியது என்ன மச்சான் ?
கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்தித்து முன்னேற வேணுமடி.
இந்த கால விவசாய நண்பர்களுக்கும் இது பொருந்தும். கவிஞர் வாழ்ந்த இருபத்து ஒன்பது வயதில் என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு கருத்து, என்ன ஒரு புரட்சி பாடல்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இவரைப் போலவே கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களும் எத்தனையோ பல பாடல்களை தந்தவர், அந்நாட்களில் இலங்கை வானொலியில் தினமும் ஒலிபரப்பாகி வந்த பாடல்களில் கவிஞர் கா.மு ஷெரீப் அவர்களின் பாடல்களும் இடம்பெற்றன.
கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் காலத்தால் அழியாத கவிதைகளையும், காவியங்களை தந்தவர். திரை உலகம் அவரை மறந்தாலும், சமுதாயம் அவருடைய வயோதிகத்தில் அவரை அரவணைக்க தவறவில்லை, கவி கா.மு.ஷெரீப் அவர்கள் ஒரு சுதந்திர போர் தியாகி. அவருக்கு வழங்க இருந்த தியாகி ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
சலுகைகள் எனது சுதந்திர தாகத்தை தனித்துவிடாது என்று பெருமிதத்துடன் கூறிய பெருந்தகை அவர்.
காதர்ஷா முகம்மது ஷெரீப். = கா.மு.ஷெரீப்.
(நன்றி அப்துர் ரஹ்மான், ரசீது மரைக்காயர்)
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Consumer & Human Rights, Thanjavur District Organizer
Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com