.

Pages

Sunday, September 28, 2014

காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்ற நாட்டு நலப்பணி திட்ட முகாம் !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ. மஹபூப் அலி தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக வரவேற்புரையை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலரும், முகாமின் அமைப்பாளருமாகிய எஸ்.நாகராஜன் வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் அனுராதா நன்றியுரை ஆற்றினார். இம்முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.






செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.