.

Pages

Tuesday, September 16, 2014

ஜித்தா விமான நிலையத்தில் ஹாஜிகளுக்கு இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபாரம் (IFF) சேவை தொடங்கியது.[படம் இணைப்பு]

இந்தியா பிரடர்னிடிபோரத்தின் (IFF)தன்னார்வதொண்டர்கள் மக்கா மதினாவில் ஹாஜிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.அதனைத் தொடர்ந்து ஜித்தா விமான நிலையத்திலும் தங்களது சேவை பணியை கடந்த மூன்று தினங்களாக செய்து வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து வரும் வயதான ஹாஜிகளை சக்கரநாற்காலி மூலம் கொண்டு சென்று அவர்களது வாகனங்களில் ஏற்றுவது அவர்களது உடமைகளையும் முறையாக வாகனங்களில் ஏற்றுவது என தங்களது சேவைபணியை இவர்கள் தொடங்கினர்.நெடுந்தூரத்தின் காரணமாக களைபடைந்துவரும் ஹாஜிகளை வரவேற்று அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை அவர்களின் சொந்த மொழியிலேயே கொடுக்கும் போதுஅவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

IFF விமானநிலையசேவைபிரிவின் தலைவர் முஜீப் (குண்டுர்) முன்னிலையில் சேவைகள் ஒருங்கினைக்கப்பட்டது.மேலும் அவர் கூறுகையில் தற்போது ஹாஜிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவே IFF ன் தன்னார்வ தொண்டர்களின் எண்ணிக்கையையும் அதிகபடுத்த வேண்டுமென இந்திய ஹஜ் மிஷனின் பொறுப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். வரும் நாட்களில் தன்னார்வதொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என முஜீப் அவர்கள் தெரிவத்தார்.

அட்டவணையின்றி வரும் விமானத்தின் மூலம் ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இருப்பினும் IFFதன்னார்வதொண்டர்கள் அவர்களின் விமானநிலைய காரியங்களைவேகமாக முடிக்க உதவி செய்வது அவர்களை மக்காவிற்கு அனுப்பிவைக்கின்றனர்.

2 comments:

  1. இந்த மகத்தான சேவைகளுக்கு நன்றி.‎
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    By:-‎
    JMMA International General Consultancy & Services.‎

    All kind of documents work. Certificate Attestation.‎
    Ration Card, Voter ID, Job Typing, Forms Creation.‎
    Web Designing. Flight Ticket Booking.‎
    All India Railway Ticket Booking.‎
    Rubber Stamp, Name Badge.‎

    For all other any enquiry, please contact us.‎
    ௦௦00 91 75 02 71 82 02 / jmmaigcs@gmail.com ‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.