1. 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன ?, தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியன இடம்பெற்றிருக்க வேண்டும்.
3. மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.
4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
5. வெளிநாடு வாழ் நண்பர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்திரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.
6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ள வழி உண்டு.
7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்கள் ஊர் பொதுநலன் சார்ந்த என்னனென்ன கேள்விகளை சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமிருந்து தகவல்களை கேட்டுப்பெறலாம் ?
உதாரணமாக, தகவல் அறியும் உரிமை சட்டதின் மூலம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிரை என்ற ஊர் பொதுநலன் சார்ந்த கேள்விகளை நாம் பார்ப்போம்.
1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்னனென்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்னனென்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?
4. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் அதிரை பேரூராட்சிக்கு தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எத்தனை ? நலதிட்டத்திற்காக அரசு ஒதுக்கிய தொகை எவ்வளவு ?
5. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இந்த பயனை பெற யாரை அணுகுவது ? என்னனென்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
6. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்னனென்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
7. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்னனென்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
8. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்களின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு நிகழுமா ? பிரதான சாலையின் இடையே செல்லும் மின்கம்பிகளுக்கு இடையே பொதுமக்கள் - வாகனங்கள் மீது மின்கம்பிகள் அறுந்து கீழே விழாதவாறு 'வலை' ( Mesh ) நிறுவப்பட்டுள்ளதா ?
9. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும் அதிரை ஈசிஆர் சாலையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை என்ன ? என்பதையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
10. அதிரை ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் அரசு மேற்கொள்ளும் விபத்து தடுப்பு நடவடிக்கை என்ன ?
11. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ? விபத்தில் காயமடைந்தவருக்கு போதிய முதலுதவி அளிக்க தேவைப்படும் வசதிகள் மருத்துவமனையில் அமைந்துள்ளதா ? என்னென்ன வசதிகள் உள்ளது ?
12. கட்டாய கல்வி சட்டத்தின் ( ஆர்.டி.இ ) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடப்பு கல்வியாண்டில் எத்தனை மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் ? மாணவ மாணவிகளின் விவரங்கள் தருக ?
13. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எத்தனை நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ? குடிநீர் விநியோகிக்கும் கால நேரம் என்ன ?
14. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் ஏதும் உள்ளதா ?
15. நமதூர் வார்டுகளில் வசூல் செய்யப்படும் வரி தொகை எவ்வளவு ? ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு வார்டுகளுக்கும் செலவிடப்படும் தொகை எவ்வளவு ?
16. ஊரில் குமியும் குப்பைகளை அள்ளிச்செல்ல பேரூராட்சியின் சார்பில் எத்தனை வாகனங்கள் உள்ளது ? அதன் தரம் என்ன ? எத்தனை குப்பை தொட்டிகள் உள்ளது ? எந்தந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது ? துப்புரவு ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை ? அவர்களின் பணி நேரம் என்ன ?
17. பேரூராட்சியின் மாதாந்திர வரவு செலவு கணக்கின் விவரங்கள் தருக ?
இப்படி நீங்களும் பயமில்லாமால் இதுபோல் உங்கள் ஊர் நலன் சார்ந்த எண்ணற்ற பல தகவல்களை கீழ்கண்ட சம்பந்தப்பட்ட மத்திய, மாநில மாவட்ட, வட்டார மற்றும் பேரூர் பகுதிகளின் பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமிருந்து கேட்டுப்பெறலாம்.
மாநில அரசு தகவல்கள் பெற :-
தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375, முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.
தொலைபேசி எண்: 044 -24357580.
மத்திய அரசு தகவல்கள் பெற :-
மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்,
டெல்லி-110056. தொலைபேசி எண்கள்: 011-26717353, 26761137.
E-mail :- s.mishra@nic.in Website : http://cic.gov.in/
குறிப்பு : மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் தாலுக்கா அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.
நண்பர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.
சேக்கனா நிஜாம்
இது ஒரு மீள் பதிவு. இதே பதிவு கடந்த [ 02-1-2012 ] அன்று பல்வேறு இணையதளங்களில் பதியப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி 'விழிப்புணர்வு பக்கங்கள்' என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன ?, தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியன இடம்பெற்றிருக்க வேண்டும்.
3. மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.
4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
5. வெளிநாடு வாழ் நண்பர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்திரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.
6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ள வழி உண்டு.
7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்கள் ஊர் பொதுநலன் சார்ந்த என்னனென்ன கேள்விகளை சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமிருந்து தகவல்களை கேட்டுப்பெறலாம் ?
உதாரணமாக, தகவல் அறியும் உரிமை சட்டதின் மூலம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிரை என்ற ஊர் பொதுநலன் சார்ந்த கேள்விகளை நாம் பார்ப்போம்.
1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்னனென்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்னனென்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?
4. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் அதிரை பேரூராட்சிக்கு தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எத்தனை ? நலதிட்டத்திற்காக அரசு ஒதுக்கிய தொகை எவ்வளவு ?
5. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இந்த பயனை பெற யாரை அணுகுவது ? என்னனென்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
6. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்னனென்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
7. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்னனென்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
8. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்களின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு நிகழுமா ? பிரதான சாலையின் இடையே செல்லும் மின்கம்பிகளுக்கு இடையே பொதுமக்கள் - வாகனங்கள் மீது மின்கம்பிகள் அறுந்து கீழே விழாதவாறு 'வலை' ( Mesh ) நிறுவப்பட்டுள்ளதா ?
9. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும் அதிரை ஈசிஆர் சாலையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை என்ன ? என்பதையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
10. அதிரை ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் அரசு மேற்கொள்ளும் விபத்து தடுப்பு நடவடிக்கை என்ன ?
11. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ? விபத்தில் காயமடைந்தவருக்கு போதிய முதலுதவி அளிக்க தேவைப்படும் வசதிகள் மருத்துவமனையில் அமைந்துள்ளதா ? என்னென்ன வசதிகள் உள்ளது ?
12. கட்டாய கல்வி சட்டத்தின் ( ஆர்.டி.இ ) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடப்பு கல்வியாண்டில் எத்தனை மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் ? மாணவ மாணவிகளின் விவரங்கள் தருக ?
13. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எத்தனை நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ? குடிநீர் விநியோகிக்கும் கால நேரம் என்ன ?
14. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் ஏதும் உள்ளதா ?
15. நமதூர் வார்டுகளில் வசூல் செய்யப்படும் வரி தொகை எவ்வளவு ? ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு வார்டுகளுக்கும் செலவிடப்படும் தொகை எவ்வளவு ?
16. ஊரில் குமியும் குப்பைகளை அள்ளிச்செல்ல பேரூராட்சியின் சார்பில் எத்தனை வாகனங்கள் உள்ளது ? அதன் தரம் என்ன ? எத்தனை குப்பை தொட்டிகள் உள்ளது ? எந்தந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது ? துப்புரவு ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை ? அவர்களின் பணி நேரம் என்ன ?
17. பேரூராட்சியின் மாதாந்திர வரவு செலவு கணக்கின் விவரங்கள் தருக ?
இப்படி நீங்களும் பயமில்லாமால் இதுபோல் உங்கள் ஊர் நலன் சார்ந்த எண்ணற்ற பல தகவல்களை கீழ்கண்ட சம்பந்தப்பட்ட மத்திய, மாநில மாவட்ட, வட்டார மற்றும் பேரூர் பகுதிகளின் பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமிருந்து கேட்டுப்பெறலாம்.
மாநில அரசு தகவல்கள் பெற :-
தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375, முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.
தொலைபேசி எண்: 044 -24357580.
Email : mailto:sic@tn.nic.in Website : http://www.tnsic.gov.in/contacts.html
மத்திய அரசு தகவல்கள் பெற :-
மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்,
டெல்லி-110056. தொலைபேசி எண்கள்: 011-26717353, 26761137.
E-mail :- s.mishra@nic.in Website : http://cic.gov.in/
குறிப்பு : மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் தாலுக்கா அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.
நண்பர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.
சேக்கனா நிஜாம்
இது ஒரு மீள் பதிவு. இதே பதிவு கடந்த [ 02-1-2012 ] அன்று பல்வேறு இணையதளங்களில் பதியப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி 'விழிப்புணர்வு பக்கங்கள்' என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.