இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் தொக்காலிக்காடு ஊராட்சிக்கும் மகிலங்கோட்டை ஊராட்சிக்கும் சமநிலையில் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மகிலங்கோட்டை ஊராட்சி தலைவர் சுப்புமாறன், காலனி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அ.தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவக்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுப்புராறன் கூறும்போது...
காலனி பகுதியில் உள்ள ஜெயபால் என்பவரை பார்க்க வந்தோம். அவருக்கு பணம் கொடுக்க வேண்டியது இருந்தது. இதனை அ.தி.மு.க.வினர் தவறாக நினைத்து தகராறில் ஈடுபட்டனர் என்றார்.
நன்றி : மாலை மலர்
சில இடங்களில் தெரு பஞ்சாயத் தலைவர் பதவிக்கு பணம் கொடுத்து தான் பதவிக்கு வருகிறார்கள், அதனால தான் கட்டபஞ்சாயத்து இன்னமும் நடக்குது,
ReplyDeleteஜனநாயகம் செத்து பணநாயகம் வந்தததால் முறையான தேர்தல் நடப்பது இல்லை. மக்கள் எதிர்ப்பார்ப்பது ஓட்டுக்கு பணம், ஆட்சிக்கு வந்தபிறகு இலவசம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை ஏன் ?
இடை தேர்தலை தடை செய்ய வேண்டும்!