.

Pages

Monday, September 29, 2014

புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவராக SDPI கட்சியின் சம்சுன் மஹரிபா பதவியேற்பு !

காலியாக உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI கட்சியின் சார்பில் சம்சுன் மஹரிபா போட்டியிட முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த [03-09-2014 ] அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்  தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மாற்று வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யாததையடுத்து ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இன்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவருக்கு முறைப்படி பதவி பிராமணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ், எஸ்டிபிஐ கட்சியின் அதிரை மற்றும் புதுப்பட்டினம் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவராக அதே கட்சியை சேர்ந்த அஹமது ஆசாத் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.