இன்று மதியம் டீ குடிப்பதற்காக கடைக்கு வந்த 4 பேர்கள் வேல்முருகனிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாய்த்தகராறு முற்றியதில் வேல்முருகனின் முகத்தில் கரண்டியால் தாக்கப்பட்டார். இதில் அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அப்போது அருகில் நின்ற சிங்கரா வேலு சமரச முயற்சியில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த 4 பேரும் கடையில் இருந்த கொதிக்கும் எண்ணையை தூக்கி சிங்கார வேலு மீது கொட்டினார்கள். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிரை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பியோடிய நபர்களை தேடி வருகிறார்கள். இதனால் பேருந்து நிலையப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
பாதிக்கப்பட்ட வேல்முருகனுக்கு உரிய நீதியையும்,நஷ்டைடும் பெற்றுக்ககொடுக்குமாறு அதிரை காவல் துறையை கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDelete