.

Pages

Thursday, September 18, 2014

பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட புற்கள் ! செக்கடி குளம் நடைமேடையின் பக்கவாட்டில் புதைக்கும் பணி தீவிரம் !! [ படங்கள் இணைப்பு ]

செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கடந்த சில வாரங்களாக ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு குளத்தை சுற்றி காணப்படும் மேடுகளை அகலப்படுத்தி பாதுகாப்பான முறையில் நடை மேடை அமைக்கவும், நடைமேடையின் பக்கவாட்டில் புற்களை அமைத்து நவீனப்படுத்தவும், மேலும் நடை மேடையின் இருபுறமும் செடிகள், மரங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குளத்தின் வடமேற்கு பகுதியில் காணப்படும் நடைமேடையிலிருந்து மணல் சரிந்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக செக்கடி குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக 3 அடி அகலமுள்ள சிமென்ட் குழாய்கள் வரவழைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு சிமென்ட் கட்டாயம் கட்டப்பட்டது.

இதைதொடர்ந்து பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட புற்களை செக்கடி குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள  நடைமேடையின் பக்கவாட்டு பகுதியில் புதைக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து புற்களை புதைக்கும் பணிகளை மேற்கொண்டுவரும் கும்பகோணத்தை சேர்ந்த காண்ட்ராக்டர் செல்வமணி நம்மிடம் கூறியதாவது...
'குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுமார் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காணப்படும் நடைமேடையில் பெங்களூரிலிருந்து பிரத்தியோகமாக கொண்டு வரப்பட்ட புற்களை பக்கவாட்டு பகுதிகளில் புதைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 15 பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக பணி செய்து வருகின்றனர். இன்னும் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து பணிகள் நடைபெறும். புதைக்கப்படும் புற்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வளர்ச்சி பெற்று பசுமையாக காட்சியளிக்கும் என்றார்.









23 comments:

  1. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வீண் விரயம் செய்யும் முன் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் இந்த பணத்தை அதிரையில் எவ்வளவு ஏழை நோயாளிகள் உள்ளனர் அவர்களுக்கு கொடுக்களாமே

    ReplyDelete
  4. இணைய தள நிர்வாகிக்கு ஒர் வேண்டல்
    இதுபோ‌ன்ற பணதிமிரில் செய்யும் காரியங்களை தயவுசெய்து ஊக்குவிக்க வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. தம்பி பசுமைபட்ரி நிர் அறிவிரோ

      Delete
    2. எங்கே சென்றது இந்த பசுமை?
      பூமிக்கு பச்சை கம்பளமாய்
      கவிக்கு உறுதுணையாய்,
      சுவாசிக்க தூயக்காற்றாய்,
      மலைக்கு அழகாய்,
      மழைக்கு முன்னுரையாய்
      இலைக்கு இசையாய்
      இருந்த பசுமை எங்கே ?
      இருந்த இடம் தெரியாமல்
      போனது எங்கே ?

      மறந்த மரத்தை
      இழந்த சுகத்தை,மீட்போம் ,
      மரத்தை வளர்த்து.
      வறுமையை போக்க,
      இறந்த பசுமையை
      அழைப்போம்!
      மறந்தான் மனிதன் மரத்தை
      என்ற பழியை போக்குவோம்!

      Delete
  5. மாஷா அல்லாஹ் இது ஒரு நல்ல முயற்ச்சி அவசியம் பாரட்டவேண்டும். மரம் வழர்ப்போம் இயற்க்கையை பாதுகாப்போம். இது போன்ற சேவை அவசியம் இக்கால கட்டத்திற்க்கு தேவை. பசுமை நிறைந்த தாவர, புல் வகைகளை வளர்ப்பதால் தான் நம் பூமியை இயற்க்கை சீற்றத்தில் இருந்து காக்க முடியும். தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்கமுடியும். வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற பசுமை எல்லா தெருக்களிலிம், செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர் பற்றாக்குறை போக்க முடியுமா ? நிலத்தடி நீர் குறைந்ததற்கு வீட்டுக்கு வீடு போர் தண்ணீரை நாமே உறிஞ்சுகிறோம்.

      Delete
    2. Ibrahim Ali, Commented in bad manner.He should polite in comments.

      Delete
    3. Dear chasecom am just expose my thought is that way yu hav makin green environment for that yur expenditure would be 22000 sq ft × atleast 100 per sq ft =220000 . If that was would be with our bhaithulmal they may help to poor adirian are mostly reach by birth and y can't people recognize and come forward 2 help poor am again say this is highly Extravagant

      Delete
  6. அன்பானவர்களே !

    செக்கடி குளத்தை புனரமைத்து - புதுப்பொலிவுடன் மாற்றுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதியை சேர்ந்த தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பாத தன்னார்வலர்கள் சிலர் தானாக முன்வந்து சொந்த பணத்தில் செய்துவரும் பணிகளை கொச்சை படுத்தி அவர்களின் மனது நோகும்படி கருத்துரைகளை வழங்க வேண்டாம்.  ப்ளீஸ்

    ReplyDelete
  7. Ivlo thogai ku pull tharai ippoluthu avasiyama sinthithu paarungal atharku marakandru gal vailakalame nechayam ithu vadi poga kudiyathu

    ReplyDelete
  8. thanks mr.Nizam-Adirai News, removed Ibrahim ali comment ,also thanking MST & Bros,DEEN-GROUPS

    ReplyDelete
  9. Yepdi 12000000 panrathu than unga pasumai puratchi ya intha kasu la 10% iruntha pothum adirai full maram vaikalam salim kaka

    ReplyDelete
  10. சேணியன் கைலி இருக்கு. அல்லது 4 முழ வேட்டியை தைத்துக் கட்டிக்கலாம். ஆனால் குதிரை, கிப்ஸ், அதிரை ஹஜரத் அல்லது 144 என்று போவதேன் ? தப்பா ?

    கூரை வீடு இருந்தாலும் போதும். ஆனால் RCC கட்டிடம் கட்டுவது தப்பா ?

    1000 ரூபாய் கைப்பேசி போதும் ஆனால் 35 ஆயிரம் ஸ்மார்ட் போன் விரும்புவது தப்பா ?

    100ரூபாய் ரெடிமேட் சட்டைப்போதும். ஆனால் ஆயிரம் ரூபாய் மீட்டர் லெனின் சட்டைப் போடுவது தப்பா ?

    தினம் சாப்பிடும் சதா சோறு மீன் ஆனம் போதும். அடுக்கு பிரியாணி கல்யாணத்திலே தருவது சாப்பிடுவது தப்பா ?

    அதிரையிலிருந்து சாத பஸ்ஸிலே சென்னைக்கு போகலாம். வீட்டு வாசலிலே சொகுசு பஸ்ஸில் போவது தப்பா ?

    இப்படி அடுக்கிகிட்டே போகலாம்....

    தங்கள் வாழ்க்கையிலே எப்படி வாழ்கிறோம், வாழ ஆசைப்படுகிறோம் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    முன்னேற்றம் எல்லாவற்றிலும் வரவேண்டும். உயர்ந்த எண்ணம் உடையவர்களை மனதாரப் பாராட்ட வேண்டும்.

    பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தால் மனதில் சுகம் உண்டாகும். இதுபோல் நாமும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். ஒரே நபர் எல்லாவற்றையும் செய்ய இயலாது. மற்றவர்கள் மற்ற நல்லவைகள் என்றதை செய்யலாமே !

    கண்ணாடியின் கலரில் பார்ப்பவைகள் தெரிந்தால், கண்ணாடியை மாற்றுங்கள்.

    இது போன்ற எல்லாம் நன்மைக்கே என்ற கண்ணாடியே நல்லது என்றால் தவறேதும் காணத்தான் இன்னும் மனம் தூண்டுமோ ?

    அவன் நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது !

    ReplyDelete
  11. சகோ. இப்ராகிம் அலி எதிர்மறை சிந்தையிலே பேசுகிறார் ஊற்றி சில Conman இருக்கத்தான் செய்வார்கள், ஒரு கிளாசில் நீரை வைத்து என்ன இருக்கிறது என்று கேட்டால் கால் கிளாஸ் காலியாக இருக்கிறது என்பார்கள். அவர் அந்த வகை... நடைமேடை அமைப்பதும் நோய் வரக்கூடாது ஆரோக்கியத்துக்கு அச்திவாரம்தானே? ஊரில் தற்காலங்களில் ஏகப்பட்ட சர்க்கரை நோயாளிகள் இருப்பதால் அவர்களுக்கு இந்த நடைப்பயிற்ச்சி சாலை அவசியமே, ஏற்கனவே நம் சகோதரர் ஒருவர் நடை பயிற்சி முடிந்து வீடு திரும்பும்போது பெட்ரோல் பங்கு அருகில் பஸ்ஸில் அடிபட்டு இறந்தார்கள் இப்பொழுது இந்த இடம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாதுகாப்புதானே? கம்பியூட்டரும் கீபோர்டும் கிடைத்துவிட்டால் எதையும் எழுதலாம் என்று எண்ணிவிட கூடாது பைத்துல்மால் அவரவர்கள் வேலையை செய்கிறார்கள், இது தனிப்பட்ட ஒரு குடும்பத்தாரின் நீண்டநாள் கனவு.
    எதிமரையாக பேசி எதை சாதித்து காட்டினீர்கள்?

    ReplyDelete
  12. yar intha muttal Ibr kali ALLAHU vaium eluth kolkrran. tks Adirai Raja

    ReplyDelete
  13. kindly remove this sentece on comment to hard பணதிமிரில்

    ReplyDelete
  14. தயவு செய்து யார் மனமும் புண்படாமல் தங்களின் கருத்துக்களை பதியுங்கள், சிலருக்கு சில விசயம் பிடிக்கும். சிலருக்கு சில விசயம் பிடிக்காது. இப்படி செயயலாம் அ்ப்படி செய்யலாம் என்று எத்தனையோ விசயங்களை சொல்வார்கள் நமக்கு பிடித்தால் செய்யலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம் ஆனால் மரியாதைக்குறைவாக தங்களை தாங்களே பார்த்துக்கொள்ளாதீர்கள், நம் வீடு சுத்தமாகி விட்டால் நோய் தடுப்பு முழுமையாகிவிடாது,

    ReplyDelete
  15. ஊருக்கு நல்லதுதானே செய்கிறார்கள் "டாஸ்மாக்" திறக்கவில்லையே? ஒருவர் பணத்திமிர் என்று எழுதுகிறார் , மற்றவர் தான் நினைத்ததைத்தான் செயல்படுத்தவேண்டும் என்கிறார். எடுத்து சொல்லுங்கள் செலவை பார்க்காமல் ஊருக்கு மரம் வளர்க்க உதவுங்கள் என்று கோரிக்கை விடலாமே. ஆனால் ஒன்று இவர்களுக்கு எதிலோ பொறாமை பொறிவிட்டு எரிகிறது. யார் இவர்கள்? இவர்களுக்கு பின்னால் யார் யாரோ இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

    ReplyDelete
  16. Dear ansari khader vayathil sinnavanaha irunthalum mur pookku sinthanayil karuthiten oru iru varudangalil nengal unarveergal......

    ReplyDelete
  17. Ansai adirai kaka avargale seivanai thiruntha sei nu nenga padithathu illaya.....
    Settiyan kulathuku seithathu pol niranthara velai seithal parata kudiyathu thaan . Pur kal vaadi poga kudiyathu . Mst and deen group adirai ku neraya thondu seivathil matru karuthu illai avargaluku allah melum kodukka dua seivom aanal avargal panam ipadi venaga povathaha nan yennukiren . Thavaraha irunthal manniyungal

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.