.

Pages

Saturday, September 27, 2014

பட்டுக்கோட்டையில் கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது 1991 முதல் 96ல் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக ( ரூ. 66 கோடி ) வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் இன்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் திரண்ட அதிமுக கட்சியினர் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியசாமியின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தினர்.  திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். பேருந்து நிலையப்பகுதியில் காணப்படும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

நன்றி : 'நிருபர்' I.M. ராஜா ( பட்டுக்கோட்டை )







2 comments:

  1. ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும், வன்முறையிலும் இறங்கியுள்ள அ.தி.மு.க.வினருக்கு ஏன் கருணாநிதி மீதும், சு.சுவாமி மீதும் கோபம் வருகிறது? இவர்களுக்கு ஜெயலலிதா மீதல்லவோ உண்மையான கோபம் வரவேண்டும்? தாங்கள் இவ்வளவு நாள் கடவுளாக மதித்து வந்த ஜெயலலிதா, எப்படிப்பட்ட ஊழல்வாதியாக இருந்து கொண்டு தங்களையும், நாட்டையும் ஏமாற்றியுள்ளார் என்ற நியாயமான கோபம் இவர்களுக்கு வரவில்லையே, ஏன்?

    ReplyDelete
  2. ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும், வன்முறையிலும் இறங்கியுள்ள அ.தி.மு.க.வினருக்கு ஏன் கருணாநிதி மீதும், சு.சுவாமி மீதும் கோபம் வருகிறது? இவர்களுக்கு ஜெயலலிதா மீதல்லவோ உண்மையான கோபம் வரவேண்டும்? தாங்கள் இவ்வளவு நாள் கடவுளாக மதித்து வந்த ஜெயலலிதா, எப்படிப்பட்ட ஊழல்வாதியாக இருந்து கொண்டு தங்களையும், நாட்டையும் ஏமாற்றியுள்ளார் என்ற நியாயமான கோபம் இவர்களுக்கு வரவில்லையே, ஏன்?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.