விசைப்படகு மீனவர்கள் தடையை மீறி இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்வளத்தை அழிப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார் கூறி வந்தனர்.
இதுதொடர்பாக கடலோர காவல்படை மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். புதன்கிழமை இரவு மீன்வளத்துறை ஆய்வாளர் கதிரேசன் மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்துப் படகில் 8-க்கு மேற்பட்ட விசைப்படகுகளை சோதனையிட்டு அவர்களிடமிருந்த பதிவேடுகளைக் கைப்பற்றினராம்.
அப்போது ஒரு விசைப்படகிலிருந்த சேதுபாவாசத்திரம் பகுதி மீனவர்கள் அருள்ராஜ்,காஜாமைதீன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது ஆய்வாளர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் பயந்த மீனவர்கள் இருவரும் கடலுக்குள் குதித்து கரைக்கு வந்தனராம். அதிகாரிகளின் இந்த அத்துமீறலைக் கண்டித்து விசைப்படகு மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அரங்கநாதன், காவல்துணை கண்காணிப்பாளர் தீபாகர்ணிகர், வட்டாட்சியர் மாணிக்கவள்ளி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.