அதன்படி அதிரை பேரூராட்சியின் சார்பில் இன்று மாலை அதிரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தார். இதில் 250 க்கும் மேற்பட்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதிரையின் பிரதான வீதிகள் வழியே சென்ற விழிப்புணர்வு பேரணியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து , திறந்த வெளியில் மலம் கழித்தல், மழைநீர் சேகரிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு தட்டிகள் எடுத்துச்செல்லப்பப்பட்டது. பேரணியில் பேரூராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
K.K. யூசுப்
நாட்டின் அனுமதியுடன் மக்காத தன்மையுடைய கனமான பிளாஸ்டிக் பை களில் தயார் செய்யப்படும் சமையல் எண்ணைகள் மற்றும் பால் இவைகளின் குப்பைகளே நமது அன்றாட பயன்பாட்டில் அதிகம் இவற்றை முதலில் அரசு தடைசெய்ய வேண்டும் ..........
ReplyDeleteஇதுபோன்ற பிளாஸ்டிக்களினால் அவைகள் பூமியில் புதையுண்டு பிற்காலத்தில் தண்ணீர் ஊற்றுக்களை அவைகள் அடைத்துவிடும் என்பதும் எனது கருத்து .....வருங்கால சந்ததியினரை மக்கள் சிந்தித்தால் நலம்.
பேரணியில் பேரூராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டதால் தெருவில் குப்பைகளை பார்க்க நேரிடும் இனியாவது வாரத்திற்கு ஒருமுறை அல்லாமல் 2-3 முறை அள்ளுவார்களா?
ReplyDeleteபிளாஸ்டிக் பயன்படுத்தி அதை முறையாக குப்பை தொட்டியில் போட்டாலே பேராபத்தை தவிர்க்கலாம், விழிப்புணர்வு மக்களுக்கு மட்டும் அல்லாமல் அரசு அலுவலர்களும் பின் பற்ற வேண்டும்.