ரியாத்தில் வீட்டு டிரைவராக வேலைபார்த்து வந்த திருச்சி மாவட்டம் அரியநல்லூரைச் சேர்ந்த சகோ. எஸ். ஜாபர் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாரடைப்பால் ரியாத் அல்-ஹமாதி மருத்துவமனையில் மரணமடைந்தார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். إنا لله وإنا إليه راجعون)
தஃபர்ரஜ் நிர்வாகக்குழு உறுப்பினர் சகோ. ஜமால் சேட் அவர்கள் அவரின் உடலை ரியாத்தில் தகனம் செய்வதற்குண்டான ஏற்பாடுகள் செய்து இன்ஷா-அல்லாஹ் நாளை (18-09-2014) அஸர் தொழுகைக்குப்பின் எக்ஸிட் 15ல் உள்ள அல்-ராஜி பள்ளியில் தொழுகை நடத்தி பின்னர் நசிம் மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கபீலைவிட்டும் ஓடிவந்தவர் என்பதால் அவரின் ஜனாசா எடுக்க பல நாட்கள் ஆகிவிட்டது, அவருக்கு உறவினர்கள் இங்கு யாரும் இல்லாத நிலையில் உள்ளதால் வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள்அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
தகவல் : முதுவை ஹிதாயத்
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். إنا لله وإنا إليه راجعون)
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
ReplyDelete(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். إنا لله وإنا إليه راجعون)
ReplyDeleteInnaalillahi wa innah hilaihi rajivoon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்