எந்தவருடமும் இல்லாத அளவு இந்தவருடம் பொய்த்து போன மழையால் அதிரையில் உள்ள அனைத்து குளங்களும் நீரின்றி வறண்டு காணப்பட்டு வருகின்றன. அதிரையர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நீந்தி மகிழ்ந்த நமதூர் குளங்கள் இன்று நீரின்றி வற்றிப்போய் அழகு இழந்து அநாதரவாய் கிடக்கின்றன. இருக்கும் மற்ற சில குளங்களிலும் கழிவு நீர்கள் சூழ்ந்து காணப்படுவதால் தினமும் குளத்திற்கு சென்று குளித்து மகிழுவோருக்கு சற்று வேதனையை ஏற்படுத்திருக்கக்கூடும்.
அதிரையை சுற்றி இருக்கக்கூடிய சின்ன ஏரி, பெரிய ஏரி, ராஜாமடம் அணை ஆகிய நீர் நிலைகளை நாடிச்செல்வது இவர்களுக்கு வழக்கமான ஒன்றாக இருந்தாலும் தொக்காலிகாட்டில் உள்ள மஹாராஜ சமுத்திர அணையில் குளிப்பதற்கு ஏற்ற அமைப்பில் சற்று இலகுவாக அமைந்திருப்பதால் அதிகமானோர் விரும்பிச் செல்கின்றனர். குறிப்பிட்ட சில வாரங்களில் மாத்திரமே நீரைக்கொண்டுள்ள இந்த அணையில் வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வரும் இளைஞர்களும், உள்ளூரில் வசிக்கும் இளைஞர்களும் ஆர்வத்துடன் இந்த அணைக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தண்ணீர் வரத்து மிதமாக இருப்பதால் அதிகமான நேரம் குளித்து மகிழ்கின்றனர். பயணத்திற்காக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் இவர்கள் குளித்து முடித்தவுடன் காலை பசியாற அணையின் அருகில் உள்ள ஆழ மரத்தடியின் நிழலில் அமர்ந்து வாங்கிச் செல்லும் புரோட்டாவை உண்டு மகிழ்கின்றனர். இங்கு சென்றுவர அதிகமாக வார விடுமுறை தினங்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
செய்தி தொகுப்பு : அதிரை நியூஸ்
படங்கள் : எஸ். அப்துல் வாஹித் ( MMS ), எஸ்.எம். வாசிம்
Adirai kulangalilum ipadi kulika aasai
ReplyDeleteEnjoy guys
ReplyDeletewonderful seen........
ReplyDeleteஅன்புடன்
மான். ஷேக்
Human Rights
Adirampattinam -614701