இதுகுறித்து புவியியல் துறை வல்லுனர்கள் கூறுவது என்ன ?
வளிமண்டலம் 'டிரோபோஸ்பியர்', 'மீசோஸ்பியர்', 'எக்ஸ்சோஸ்பியர்', 'அயனோஸ்பியர்' எனும் நான்கு அடுக்குகளால் ஆனது. பூமியின் பரப்பிலிருந்து 12 கி.மீ., தூரம் வரை உள்ள 'டிரோபோஸ்பியர்' அடுக்கில் தான் வானியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. மழை மேகங்கள், காற்றுகளுக்கு இடையே அடர்த்தி மாறுபடுகிறது.
மழை, மேக மூட்டத்தின் போது ஏற்படும் வானவில் போன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள 'டிரோபோஸ்பியர்' அடுக்கில் 'ஒளி விலகல்' ஏற்பட்டு உள்ளது. நீர் ஆவியாதல் மூலம் மேலெழும்பி சென்று நீர்த்திவலைகளாக தேங்கி நிற்கிறது. பூமியிலிருந்து அதிக அளவில் வெப்பக் காற்று மேலெழும்போது இந்த நீர்த்திவலைகளுக்கும், வெப்பக்காற்றுக்கும் இடையே அடர்த்தி மாறுபாடு ஏற்படுகிறது. அடர்த்தி மாறுபாட்டின் போது நீர்த்திவலைகளின் மீது, சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் 22 டிகிரி கோணத்தில் படுகிறது. இதை 'சிர்கோ ஸ்ட்ரேடஸ்' என்கிறோம். அப்போது இதுபோன்ற 'ஒளி விலகல்' ஏற்படுகிறது. நீர்த் திவலைகள் அறுகோண வடிவில் இருப்பதால் வட்ட வடிவமாக தெரிகிறது என்பதாக கூறுகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள் : யாசின்
This comment has been removed by the author.
ReplyDelete