.

Pages

Monday, December 1, 2014

துபாய் மனார் சென்டர் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

சென்ற 28.11.2014 வெள்ளிக்கிழமை பின்னேரம் இரவு சுமார் 7 மணியளவில் துபை அல் மனார் சென்டர் திறந்தவெளி அரங்கில் மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் 'மண்ணறை முதல் மறுமை வரை' என்ற தலைப்பில் பேரூரையாற்றினார்கள்.

எதிர்பார்ப்பிற்கு மேல் ஆண்கள் திரண்டு வந்திருந்தனர். இடவசதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்திடும் வண்ணம் விரிப்புக்கள் விரிக்கப்பட்டு புரோஜக்டர் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆண்களுக்கு நிகரான ஆர்வத்துடன் பெண்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், அபுதாபியிலிருந்து சுய ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்ட பிற மத சகோதரர்களுக்கு அல் மனார் சென்டர் உள்ளரங்கில் பிரத்தியோக சிறப்பு தர்பியா நடத்தப்பட்டு இஸ்லாத்தை தழுவிட அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

முஸ்லீம் சகோதரர்களை பொருத்தவரையில் அவர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள பல வழிகள் இருப்பதாலும் பிற மதத்தினருக்கு அத்தகைய வாய்ப்புக்கள் குறைவு என்பதாலும் எதிர்வரும் காலங்களில் பிற மத சகோரர்களுக்கென்றே சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் தஃவா குழுவினர் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முன்னை விட அதிகம் அதிகரித்துள்ளது

துபையிலிருந்து
எஸ். அப்துல் காதர், நூவன்னா

1 comment:

  1. நிகழ்ச்சியின் காணொளியை காண இந்த சுட்டிக்குள் செல்லுங்கள்

    http://m.youtube.com/watch?v=ugQqpEEJ-ck

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.