.

Pages

Sunday, December 14, 2014

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற காதிர் முகைதீன் மேல்நிலைபள்ளி மாணவர்கள் கெளரவிப்பு !

கடந்த [ 05-12-2014 ] வெள்ளிக்கிழமை அன்று அதிரை சிட்னி அணியின் சார்பாக ஜூனியர் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் வினோத் குமார், அஹமது ரிஜ்வான்  ஆகியோர் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்றனர்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வகையில் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் ஹாஜி ஏ. மஹபூப் அலி. பெற்றோர் ஆசிரியர் கழக துணை செயலாளர்  எம்.ஏ. முஹம்மது தமிம் மற்றும் பள்ளியின் ஏனைய முதுகலை ஆசிரியர்கள் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.

3 comments:

  1. வாழ்த்துகள் பாராட்டுகள்

    ReplyDelete
  2. மாநில அளவில் வெற்றி பெற என்வாழ்த்துக்கள், மாணவனிடம் திறமை இருக்கு வழிகாட்டுங்கள், சிகரத்தை தொடுவார்கள்

    ReplyDelete
  3. இவர்களின் அறிவு திறனை கண்டு மீண்டூம் மீண்டூம் வெற்றி பெற ஆசிரிய பெருமக்கள் ஊக்கப்டூத்த வேண்டூம் என்று விரும்பி கேட்டுகொள்கிறேன்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.