இரண்டாம் உலகப் போரில் மன்னர் ஆட்சியின் மகுடங்கள் சரிந்து மக்கள் ஆட்சி பல்வேறு நாடுகளில் மலர்ந்தது. மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்தப் பிரதிநிதிகள் மூலம் ஆட்சி செய்வது தான் ஜனநாயகம். மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தலைவர்கள் அகிலத்தில் உண்டு. அவர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை, உறவினர்களை வாரிசாக நியமனம் செய்ததில்லை. வாரிசுகள் அரசில் தலையீட்டால் பல்வேறு தலைவர்கள் பதவி இழக்கும் சம்பவங்களும் உண்டு. தலைமைப் பதவியினை ஏற்ற வாரிசுகள் சர்வாதிகாரிகளாக மாறி சிம்மாசனங்களை இழந்தவர்களும் உண்டு.
அவ்வாறு பதவி இழந்ததிற்கு முக்கிய காரணங்களாக அமைந்தது:
1) வாரிசுகள் மைனர்களாகவும், முன் அனுபவமில்லாது குழப்பமான அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
2) வாரிசில்லாத ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், மாட்சிமை அமைந்தவர்களாகவும் இருந்ததால் மக்கள் மற்றவர்களை தேர்ந்தடுத்தது.
வாரிசுகள் என்பது புகழுக்காகவோ, பதவி சுகத்திற்காகவோ , தங்களுக்குள்ளே இருக்கும் குரோதத்தினை பதவியால் பழி தீர்த்துக் கொள்வதிற்காகவோ அல்ல. மக்களை உண்மையான நேரான வழியில் நடத்திச் செல்லவே பயன் படும் என்றால் மிகையாகாது.
இறை வழி வந்த யூத, கிருத்துவத்திலோ அல்லது இஸ்லாமிய மார்க்கத்திலோ வாரிசு உரிமை இல்லை. எம்பெருமானார்(ஸல்) அவர்கள் கூட தன் கடைசி வாழ்நாளில் என் வாரிசு இவர் தான் என்று சுட்டிக் காட்டவில்லை. அனைத்து மக்களையும் அனைத்துச் செல்லும் திறமை அவர்களிடம் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கி இருந்ததால் பெருமானார் அவர்கள் யாரையும் வாரிசு என்று சுட்டிக் காட்ட வில்லை. ஆனால் இன்று பல்வேறு இஸ்லாமியர் ஆளும் அராபிய, வளைகுடா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அனுபவமில்லா வாரிசுகளை நியமித்ததால் உள்நாட்டுக்குள்ளே குழப்பம், வெளிநாட்டு மிரட்டல், அந்நிய நாடுகளின் ஆதிக்கம் ஆகியவைகளுக்கு வழிவிட நேருகிறது.
செல்வமிருந்தும் சொந்தக் காலில் நிற்க முடியாமல் உதவிற்கு மேற்கத்திய நாடுகளை நாட வேண்டியிருப்பது கேவலமில்லையா? மக்கள் பணி மறந்து மயக்கத்தில் இருப்பதினால் இந்த பரிதாப நிலை இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது என்பதினை துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றவர்களுக்குத் தெரிந்திருக்கும் எப்படியெல்லாம் அவர்கள் மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளார்கள் என்று.
அமெரிக்க நாட்டில் கறுப்பின மக்களை தட்டி எழுப்பி, அவர்களுடைய உரிமைக்காக தன்னுயிர் கொடுத்த மார்டின் லூதர் கிங், சொந்த நாட்டில் வெள்ளை இன மக்களால் பல இன்னல்கள் பட்ட கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்த தென் ஆப்ரிகா சிங்கம் நெல்சன் மண்டேலா, காலனி ஆதிக்கத்திலிருந்து அன்னியப் படைகளை விரட்டிய துருக்கி நாட்டினைச் சார்ந்த முஸ்தபா கமால் அட்டா துர்க், எகிப்தினைச் சார்ந்த கமால் அப்துல் நாசர், இந்தியா, பாக்கிஸ்தானைச் சார்ந்த மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா போன்றோர் தங்கள் வாரிசுகளாக யாரையும் சுட்டிக் காட்டவில்லை என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. ஆனால் அதன் பின்னால் வந்த ஆட்சியாளர்கள் தங்கள் வாரிசுகளை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அடையாளம் காட்டியதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதன என்பது நாம் அறிவோம்.
இந்திய அரசியலில் மற்றவர்களுக்கு முடிசூட்டும் தலைவராக இருந்த காமராஜர்,தாழ்த்தப் பட்ட மக்கள் தலைவர் டாக்டர் அம்பேத்கார், சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருந்த கண்ணியமிகு காயிதே மில்லத், பகுத்தறிவு பகலவன் பேரறிஞர் அண்ணா போன்றோர் தங்களுடைய வாரிசு இன்னார்தான் என்று சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அந்தப் பெரியார்களின் பெயரில் கட்சி நடத்தும் சிலர் தாங்கள் தான் வாரிசு என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். ஆனால் அந்தப் பெரியார்களின் கொள்கைகளை காற்றில் பறக்கச் செய்யும் பரிதாபம் நீங்கள் காணலாம். எங்கெல்லாம் அரசியல் வாரிசாக தன் குடும்பத்தினைச் சார்ந்தவர்களை அடையாளம் காட்டுகிறார்களோ அங்கெல்லாம் அரசியல் தோல்விகளை அன்றாட அரசியல் வானில் காணலாம்.
உதாரணத்திற்கு ஹரியாணா மாநிலத்தில்முன்னாள் துணை பிரதமர் தேவிலால் வாரிசு ஓம் பிரகாஸ் சௌட்டாலா, பீகார் முன்னால் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் முன்னால் முதல்வர் மனைவி ராபரி தேவி , முன்னால் துணை பிரதமர் சரண் சிங் மகன் அஜீத் சிங், கர்நாடகா முன்னாள் பிரதமர் தேவி கௌடா மகன் குமாரசாமி போன்றவைகர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய கட்சியின் செல்வாக்குகளும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையானது அனைவருக்கும் தெரியும்.
அரசியல் போன்றே மதத்தலைவர்களும் தங்கள் வாரிசுகளை நியமனம் செய்வதால் மக்கள் மனதில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் ஏற்பட்டிருப்பதினை இரண்டு உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன்.
1) முகலாய பாரம்பரிய சின்னமாக தலைநகர் டெல்லியில் உள்ளது ஜும்மா மஸ்ஜித் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். நானும் முதல் முறையாக 1979 ஆம் ஆண்டு பார்த்துப் பரவசப் பட்டிருக்கின்றேன். அங்குள்ள இமாம் புஹாரி தனது 19 வயது மகனை தனது வாரிசாக நியமித்துள்ளார். அது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானதல்லவா? அந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்றது மக்களின் புருவத்தினை உயர்த்த வைத்தது.
2) பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் ஆசிரமம் அமைத்து ஆட்சிமை நடத்திய திவ்ய ஜோதி சுவாமி அவர்கள் சென்ற நவம்பரில் மரணம் அடைந்து விட்டார். அந்த ஆசிரமத்தினைச் சார்ந்த பலகோடி மதிப்புள்ள சொத்தினை சொந்தம் கொண்டாட அவருடைய மகன்களிடையே வாரிசு போட்டி ஏற்பட்டதால் இறந்த சாமியின் உடலினை ‘ப்ரீசர் பெட்டியில்’ வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சாமியார் மீண்டும் உயுர் பெற்று மக்களுக்கு பூஜைகள் நடத்த யார் வாரிசு என்று அடையாம் காட்டுவாராம்.. இந்த வழக்கும் பஞ்சாப் உயர் நீதிமன்ற வரை சென்று உயர் நீதிமன்றமும் சென்ற நவம்பர் மாதத்திற்குள் அவருடைய உடலை அப்புறப் படுத்தி தகனம் செய்யவும் என்று ஆணைப் பிரபித்தும் இன்னும் அந்த பிரேதம் பாதுகாக்கப் பட்டு வருவதாக பத்திரிக்கை செய்திகள் படம் பிடித்துக் காட்டுகின்றன என்பது என்னே வேடிக்கையான செயல்.
தமிழக முஸ்லிம் கட்சிகளில் சிலர் கண்ணியமிகு காயிதே மில்லத், அதற்குப் பின்பு வந்த சிராஜுல் மில்லத் ஆகியோருடைய உண்மையான வாரிசு நாங்கள் தான் என்று பெயரளவில் லெட்டெர் பேடு வைத்து அரசியல் நடத்தி தேர்தல் நேரத்தில் பத்தோடு பதினொன்றாக இருப்பது எந்த விதத்திலும் இதுவரை பலனளிக்கவில்லை என்பது தான் உண்மை. அந்தத் தலைவர்களின் குடும்பச் சொத்துக்கு அவர்கள் வாரிசாக இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்த சமூதாயத்திற்கும் யாரும் உரிமை கொண்டாட முடியுமா?
அதேபோன்று தான் இமாம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் பணியாளர் ஆவார்கள். அவர்கள் பணிபுரியும் பள்ளிக்கே எஜமானவர்களாக ஒருபோதும் ஆக முடியுமா?
ஆகவே தனிப் பட்ட குடும்ப மற்றும் சொத்து பங்கீடு செய்வதில் வாரிசுகள் செல்லுபடியாகுமே தவிர அரசியல் வானிலோ, மத சம்பிராய சடங்குகளிலோ அதுபோன்ற செயல் போணியாகாது என்றால் சரிதானே!
டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி / எழுத்தாளர் / சமூக ஆர்வலர்
சிறந்த விளக்கம்...
ReplyDeleteசிறந்த விளக்கம்...
ReplyDeleteமறைந்த முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் MGR அவர்கள் சினிமாவில் தான் பாடிய அனைத்து பாடல்களையும் சாதித்து காட்டி ஆட்சியை பிடித்தவர் ஆனால் இந்த பாட்டை மட்டும் அவரால் சாதிக்க முடியவில்லை அதுதான் இது .
'எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் !'
அரசியலில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம், தலைவர் முதல் வட்டம், சதுரம், கைத்தடிகள், அடிமட்டம் வரை வாரிசுகள் பதவியில் அமர்ந்து கொள்ளை அடிப்பது மட்டுமல்லாமல் கொலையும் செய்கிறார்கள் அதோடு சாதுரியமாக தப்பித்தும் விடுகிறார்கள், பண்புள்ள தலைவர்கள் காண்பது தேடும் பொருளாக மாறிவிட்டது.
ReplyDeleteசிந்திக்கத்தூண்டும் அருமையான சிறப்பு பகுதி, கொஞ்சம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை.......... எழுதுங்களேன்!
தொடரட்டும் உங்கள் ஆக்கம்; வாழ்த்துக்கள்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அருமையான கட்டுரை, விளங்க வைப்பதில் தனித்திறமை வாய்ந்ததாக இருக்கின்றது, இன்றைய காலக் கட்டத்திற்கு ஏற்றதொரு கட்டுரை.
ஒரே இரத்தம் உறவுடைய உண்மையான வாரிசுகளிலேயே இன்று பல பிரச்சனைகள் இருந்து வருகின்றது, தந்தையின் மறைவுக்கு பின் மகன்களிடையே போட்டி, அதாவது மூத்தவன் இருக்க, இளையவன் தன்னுடைய செல்வாக்கில் தன்னை மூத்தவனாக அடையாளப்படுத்தி, உண்மையான மூத்தவனை தனக்கு இளையவனாக்கிய தில்லு முள்ளு எல்லாம் நடந்து கொண்டிருக்கு.
பொதுவாக இது மிகவும் அருமையான கட்டுரை.
வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
மனிதம் எங்குள்ளதோ அங்கு நியாயங்கள் இருக்கும். தனக்கும் பிறருக்கும் அமைதி கெடாமல், பிறரையும் தன்போல் பாவிக்கும் நிலையை மனிதம் என்றேன்.
ReplyDeleteஎனக்கொரு மகன் பிறப்பான் ...வாரிசுகளுக்கான நல்ல எடுத்துக்காட்டுடன் மிகத் தெளிவாக அறியத்தந்துள்ளீர்கள். பொதுநலனில் அக்கறைகொண்டு ஈடுபடுவோர் வாரிசைப் பற்றி நினைக்க மாட்டார்கள் வாரிசு என்கிற பேச்சு வந்துவிட்டாலே அங்கு சுயநலம் தலைதூக்குகிறது என்பதாகவே அர்த்தமாகிறது சிறந்த ஆய்வு .வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னுடைய கட்டுரையினைப் படித்து தங்கள் கருத்துக்களைச் சொன்ன சகோதரர்களுக்கும், அதனை பிரசுரித்த அதிரை நியூஸ் குழுவிற்கும் நன்றி. தமிழ்நாடு அரசியல் வாரிசுகள் பற்றி மேலும் சொன்னால் சிலருக்கு சங்கடம் ஏற்படும் என்று நினைத்ததால் அதனை விரிவாக எழுதவில்லை.
ReplyDelete