.

Pages

Friday, December 19, 2014

சாக்கடை கலந்த குடிநீருடன் பேரூராட்சிக்கு வந்த கவுன்சிலரால் பரபரப்பு !

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு நெய்யக்காரதெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சுமார் 2 மாதகாலமாக சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி ஜூரம் மற்றும் தலைவலி போன்ற வியாதிகள் அடிக்கடி வருகிறது. இதனால் குடிநீரை குடிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். மேலும் குடிக்கவும், சமையலுக்கு பயன்படுத்தவும் குடிநீர் தனியார் லாரிகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலரும், பொது மக்களும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வில்லை. இதனால் விரக்தி அடைந்த பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர் ஜகபருல்லா நேற்று காலை சாக்கடை கலந்த அந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து பேரூராட்சி அலுவலகத்துக்கு எடுத்து வந்தார்.

பின்னர் அந்த குடிநீரை அதிகாரிகளிடம் கொடுத்து குடித்து பார்க்க சொல்லி இதை தான் எங்கள் பகுதி மக்கள் குடித்து வருகிறார்கள். இதனை எப்பொழுது சரி செய்வீங்க? என்று கூச்சலிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி மற்றும் படம்:
நிருபர் மொய்தீன் பிச்சை,
முத்துப்பேட்டை

1 comment:

  1. தண்ணீரை ஊற்றி அதிகாரிகளை குடிக்க சொல்லி இருக்கணும் இல்ல இல்ல குடிக்க வைத்து இருக்கணும் அப்பத்தான் உணர்வார்கள்.

    பலகாரணங்களை சொல்லி அரசு அதிகாரிகள் தப்பித்து விடுவார்கள் மேல் முறையிடு செய்வதே நல்லது. ரோடு போட்டா ரோடு காணோம் அதோடு தண்ணீரின் நிலைமையும் அப்படியா? போராடுங்கள் வெற்றி நிச்சயம் உண்டு!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.