.

Pages

Friday, December 19, 2014

செடியன் குளம் நிரம்பி வெளியேறும் வெள்ளத்தால் தத்தளிக்கிறது பிலால் நகர் - நேரடி ரிப்போர்ட் ! [காணொளி இணைப்பு]

அதிரையின் தாழ்வான பகுதிகளில் ஒன்று பிலால் நகர். வழக்கம் போல் மழை காலங்களில் இப்பகுதியில் தேங்கிக்காணப்படும் தண்ணீரால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும். நேற்று முன்தினம் முதல் அதிரையில் பெய்த கனமழையால் இப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் அருகில் உள்ள மிகப்பெரிய ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளத்திலிளிருந்து தண்ணீர் நிரம்பி பிலால் நகர் குடியிருப்பில் சூழ்ந்துள்ளது. இதனால் பிலால் நகர் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இப்பகுதிகளில் காணப்படும் சில குடிசைகளிலும் தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் புதிதாக போடப்பட்ட தார் சாலை முழுவதும் பழுதடைந்துள்ளது. இந்த சாலை வழியே பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும், தொழுகைக்கு செல்வோரும், முதியோர்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வீட்டிற்குள் முடங்கி காணப்படுகின்றனர். அன்றாட பணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை இன்னும் தொடர்ந்து சில நாட்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும், எந்தவொரு கட்சியினரும், அமைப்பினரும், ஆர்வலர்களும் கண்டுகொள்ளாதது வருத்தம் அளிப்பதாக இந்த பகுதியினர் தெரிவித்தனர்.

களத்திலிருந்து அஜீம்


2 comments:

  1. தம்பிகளா விலையாடுவது சரி பார்த்து ஏன் என்றால் அந்த குலத்திற்கு வருடா வருடம் ஆள் வாங்கும் சக்தி வாய்ந்த குளம் கவணமாக குளிக்கவும் இறைவன் பாதுகாப்பானகவும்

    ReplyDelete
  2. மழைநீர் உயிர்நீர் என்ற வாசகம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்காவதுபோல் அல்லவா உள்ளது இது தமிழ்நாடு முழுவதும்மே இதே நிலைதான் நல்ல தண்ணீர் கடலில் கலப்பதை ராஜாமடம் அருகில்உள்ள காட்டாற்றை பார்க்கும்போது வாசகத்தை எழுதச்சொன்ன தமிழக அரசின் தவறான வாசகத்தை எழுதிவிட்டது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.