.

Pages

Monday, December 8, 2014

தஞ்சையில் ஜி.கே.வாசன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அதிரை தமாகாவினர் பங்கேற்பு !

கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக்குழுவை உடனே அமைக்க வலியுறுத்தியும், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி பிரதமரை சந்திக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் த.மா.கா. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ, அதிரை நகர தமாகாவினர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தின் கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்கள் கையில் த.மா.கா. கொடியுடன் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

4 comments:

  1. இது தலைவர் ஜி.கே.வாசன் அவர்களுடைய முதல் வெற்றி

    ReplyDelete
  2. இந்த நல்ல செய்தியை தந்த அதிரை நீயூஸ்க்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  3. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை, பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது இதை போல தான் வாசன் செயல் உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள பிரச்சனை பற்றி பேச மாட்டாங்க; அட சட்டசபையில் என்ன பேசினாங்க??? போனாங்களா ???

    மந்திரி பதவி போனால் தான் தமிழ், தமிழர் நலன், மக்கள் எல்லா நியாபகமும் வரும், வேடிக்கையாக இருக்குதுப்பா!.

    ReplyDelete
  4. கோடி சம்பாதிக்க கட்சி ஆரம்பிப்பாங்க, ஆனால் இந்த மூப்பனார் குடும்பமோ கோடிகள் மதிப்புள்ள சொத்தை பாதுகாக்க கட்சில் இணைந்தார்கள்.
    திராவிட கட்சிகள் நடிகன்களை வைத்து படம் காட்டி அடித்த ஊழல்கள் போதும். 2016யில் மாற்றம் வரும்
    G.K. வாசன் தலைமையில்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.