முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி யில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை சாலையின் பங்களாவாசல் முதல் பேட்டை கிராமம் வரை உள்ள சிமென்ட் சாலை ரூ 39.7லட்சத்தில் அமைக்கப்பட்டது. இந்த சாலை போதிய தரம் இல்லாததால் சிமென்ட் மற்றும் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலை போன்று காட்சி அளிக்கிறது. இது குறித்து பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாலை அமைத்த ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுத்து பழுது அடைந்த சிமென்ட் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். பேரூராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பேட்டை சிமென்ட் சாலை தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த முத்துப்பேட்டை தமுமுகவினர் நேற்று நகர தலைவர் சம்சுதீன் தலைமையில் செயலாளர் சீமான், பொருளாளர் தாவூதுஷா, நிர்வாகி முகமது யாசின் மற்றும் தமுமுகவினர் பேரூரா ட்சி அலுவலகம் சென்று அலுவலர் செல்வகுமாரிடம், சமீபத்தில் போடப்பட்ட பேட்டை சிமென்ட் சாலையை காணவில்லை. காணாமல் போன இந்த சிமென்ட் சாலையை உடனடியாக ஒரு வார காலத்திற்குள் கண்டுபிடித்து பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு புகார் மனுவை கொடுத்தனர். பின்னர் அதே போல் முத்துப்பேட்டை காவல் நிலையம் சென்ற த.மு.மு.கவினர் அங்கிருந்த சப்இன்ஸ்பெக்டர் வெர்ஜினியாவை சந்தித்தும் புகார் மனு கொடுத்தனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
செய்தி : 'நிருபர்' முகைதீன் பிச்சை
படங்கள்: சூனா ஈனா



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.