.

Pages

Wednesday, December 17, 2014

பொலிவிழந்து காட்சியளிக்கும் மேலத்தெரு மைதானம் !

அதிரை பெரிய ஜும்மா பள்ளி பின்புறம் மேலத்தெருவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், திருமண நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வரும்.

இந்த நிலையில் இந்த மைதானம் செடிகளால் மண்டிக்காணப்படுவது அப்பகுதியில் வசிக்கும் விளையாட்டு ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைக் கூளங்கள் ஆங்காங்கே சிதறியும் காணப்படுகிறது. ஆடு மாடு உள்ளிட்ட விலங்கினங்களின் கழிவுகளும் ஆங்காங்கே கொட்டிக்கிடப்பதால் துர்நாற்றம் வீசிவருவதாகவும், இரவு நேரங்களில் பாம்புகள், விஷ வண்டு, பூச்சி உள்ளிட்டவை புழங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மைதானத்தில் பல்வேறு கால கட்டங்களில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்து காட்டி இருக்கின்றனர் என்றும், தற்போது இந்த மைதானம் பொலிவிழந்து காட்சியளிப்பது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மைதானத்தை தூய்மை படுத்தும் பணிகளில் இந்த பகுதியில் வசிக்கும் ஆர்வலர்கள், இந்த பகுதியின் அமைப்புகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என இந்த பகுதியில் வசிக்கும் விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 comments:

  1. Ellame summa kanthudaippu thaa....ella amaipum.......??????

    ReplyDelete
  2. Yar munnuku varra nu naangalum parkirom ella amaipukkom oru saaval ....yengalal mudiyum aanal nangal poruthu irukkom ......innum 24 mani neram avagasam pothum .....ellarukum pathil kidaikum kidaika vaipom ipadikkum wsc......nanbarghal.........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.