மன்னார்குடியில் தமிழக அரசு இரண்டாவது முறையாக உயர்த்தி உள்ள மின்சார கட்டண உயர்வை கண்டித்து பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது. மாவட்ட காங்கிரஸ் முன்னால் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை வகித்தார். முன்னால் தலைவர் மன்னை மதியழகன், நகர தலைவர் மடப்புரம் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு.வே.வீரமணி வரவேற்று பேசினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் நாச்சிக்குளம் தாஹீர், விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் நெடுவை ராஜதுறை, முன்னால் மாவட்ட தலைவர் ராஜகோபால், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகைதீன்பிச்சை, மாவட்ட விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் வைரவநாதன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் வடுகநாதன், முத்துப்பேட்டை வட்டார நிர்வாகிகள் உதயை தங்கராஜன், பக்கிரிசாமி, நகர நிர்வாகி ஜகபர் அலி. கொரடாச்சேரி முத்துக்குமார் உட்பட பலரும் பேசினார்கள். இதில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் கலந்துக்கொண்டனர் முடிவில் மன்னார்குடி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.