காவிரியின் குறுக்கே புதிதாக இரண்டு அணைகளை கட்டி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் அத்துமீறலை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளை பாதுகாத்திடவும், மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்களை மீட்டிட, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். டிசம்பர் 12 தொடங்கி 19 வரை எட்டு தினங்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 200 கி.மீ தூரம் வீதம் 1600 கி.மீ பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
செவ்வாய் அன்று காலை 9 மணி முதல் பேராவூரணி ஒன்றியத்தில் உதயசூரியபுரம், வா.கொல்லைக்காடு, திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு, கரிசவயல், மல்லிபட்டினம், குருவிக்கரம்பை, உடையநாடு, மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம், பெருமகளூர், ரெட்டவயல், ஆவணம்- கைகாட்டி, செருவாவிடுதி, கொன்றைக்காடு உள்ளிட்ட மையங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வேனில் நின்றபடி உரையாற்றினார்.
பின்னர் மாலை பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில் , " தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேவைப்பட்டால் பிரதம மந்திரியை அனைத்து கட்சியினருடன் சென்று முதலமைச்சர் சந்தித்து பேசவேண்டும். ஒருவேளை மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய செல்லும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள் ஸ்தம்பிக்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசாங்கம் தமிழக அரசை கலைத்தால், அடுத்து வரும் பொதுத்தேர்தலில் மக்கள் பெரும்பான்மை பலத்துடன் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சந்திரசேகரன், பட்டுக்கோட்டை ஜெயபாரதி விஸ்வநாதன், மு.கி.லெனின், குமார், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி .
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். டிசம்பர் 12 தொடங்கி 19 வரை எட்டு தினங்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 200 கி.மீ தூரம் வீதம் 1600 கி.மீ பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
செவ்வாய் அன்று காலை 9 மணி முதல் பேராவூரணி ஒன்றியத்தில் உதயசூரியபுரம், வா.கொல்லைக்காடு, திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு, கரிசவயல், மல்லிபட்டினம், குருவிக்கரம்பை, உடையநாடு, மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம், பெருமகளூர், ரெட்டவயல், ஆவணம்- கைகாட்டி, செருவாவிடுதி, கொன்றைக்காடு உள்ளிட்ட மையங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வேனில் நின்றபடி உரையாற்றினார்.
பின்னர் மாலை பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில் , " தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேவைப்பட்டால் பிரதம மந்திரியை அனைத்து கட்சியினருடன் சென்று முதலமைச்சர் சந்தித்து பேசவேண்டும். ஒருவேளை மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய செல்லும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள் ஸ்தம்பிக்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசாங்கம் தமிழக அரசை கலைத்தால், அடுத்து வரும் பொதுத்தேர்தலில் மக்கள் பெரும்பான்மை பலத்துடன் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சந்திரசேகரன், பட்டுக்கோட்டை ஜெயபாரதி விஸ்வநாதன், மு.கி.லெனின், குமார், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.